கோவிலூர் மடாலயத்தின் ஆதீனம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முக்தியடைந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கோவிலூர் மடாலய ஆதீனம் 350. ஆண்டுகளைக் கடந்து பழமையானது, 13-ஆவது பட்டம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் (வயது 82) செவ்வாய்க்கிழமை ஜனவரி.17ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பரிபூரணம் (முக்தி) அடைந்தார். ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் ஆதீனம் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார்.
புதன்கிழமை ஜனவரி மாதம்.18 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை செய்து சித்தி செய்தனர். வரும் ஜனவரி மாதம் . 26 ஆம் தேதி புதன்கிழமை 10 ஆம் நாள் மோட்ச தீபம் ஏற்றப்படும் என்று கோவிலூர் மடலாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது .
13_ஆவது பட்டம் கோவிலூர் மடாலய ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமி உடலுக்கு 14 வது மடாதிபதியாக பட்டமான கோவிலூர் மடத்துக்கு சொந்தமான நிறைந்த சொத்துகளை நிர்வகிக்க, பொறுப்பேற்க உள்ள அன்னலட்சுமி உணவகம் நடத்தி வந்த உரிமையாளர் நாராயணன் செட்டியார் மடாதிபதியாகி இறுதி மரியாதை செலுத்தும் முகமாக நல்லடக்க நிலையில் விபூதி போடுகிறார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எனும் சோழ நாட்டின் மகுட வைசிய தமிழ்க்குடியான செட்டியார்கள் காவிரிப்பூம் பட்டிணம் நகரத்தாரின் முதல் ஞான பீடமான கோவிலூர் மடத்தின் புதிய மடாதிபதியாக சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகளாக புதிய பட்டமாக வந்துள்ளார்.துறவு பூண்டு மடாதிபதி ஆனாலும் சமஸ்தானத்தில் ஆட்சி நடத்தும் மன்னர் ஆனாலும் இறந்த பின் அடுத்த மடாதிபதியோ மன்னரோ தேர்வாக வந்து தான் அவர்கள் நல்லடக்கம் நடத்துவது இந்து சமய மரபு.
கருத்துகள்