தனிநபர் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட ஈ.வே.ரா. பெரியாரின் சிலை அகற்றிய இரண்டு அதிகாரிகள் பணி மாற்றம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட தனிநபர் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட
ஈ.வே.ரா. பெரியாரின் சிலை அகற்றிய வட்டாச்சியர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணி மாற்றம்.
திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் கட்டிய புதிய வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட ஈ.வே.ரா. பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பானது
அதனைக் கண்டித்து அந்த இடத்திலேயே பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிகிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயல்படுகிறார்.இவர் காரைக்குடி வட்டம் கோட்டையூர் உதயம் நகரில் சொந்தமாகபுதிய வீடு கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குஉள்ளே ஈ.வே.ரா. பெரியாரின் மார்பளவு பைபர் சிலையும் வைத்துள்ளார்
.பாஜகவில் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இவரது வீடு அமைந்துள்ள நிலையில் ஈ.வே.ரா.பெரியார் சிலையின் திறப்பு விழா காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இந்தச் சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டநிலையில் இந்தச் சிலையை திறக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நேற்று அனுமதி மறுத்ததால் பரபரப்பானது.
நேற்று இளங்கோவனின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சிலையை அகற்றும் படி சொன்னதற்கு இளங்கோவன் மற்றும் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், எதிர்ப்பையும் மீறி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் , பெரியார் சிலை மீது துணியைச் சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக அந்த அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர். அது குறித்து
திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த அரசு எழிலன் கூறுகையில் :- அரசு அனுமதி பெற்ற சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கிய இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டிய பிறகும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதை அகற்றினர் என்று தெரிவித்துள்ளார்.
அது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரான இளங்கோவன் கூறியதாவது,:- பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை என்னுடைய சொந்த பட்டா இடத்தில் மதில் சுவருக்கு உள்ளே நான் வைத்தேன். காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் ஒரு கட்சியைச் சேர்ந்த யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சிலையை அகற்றியுள்ளார்கள்.காரைக்குடியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம். சிலையை அகற்றக்கூடாது, அப்படி அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். மீறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தோம்.சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நான் படித்துக் காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவேன் என்று சொன்ன போது நீங்க நீதிமன்றம் போங்க என்று கூறினார். இந்த சிலையை வைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும் என்கிறார்கள். யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் போய் பேசச் சொன்னோம். காவல்துறையில் காவிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது வெறும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பெரியாருக்கு சிலை வைப்பதில் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை. ஏதோ பாஜக ஆட்சி நடப்பதைப் போல் தெரிகிறது" எனத் தெரிவித்த நிலையில் ஈ.வே.ரா.பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டுக்கு தமிழ் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார், சொந்தமான வீடு கட்டி. அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே ,ஈ.வே.ரா பெரியாரின் மார்பளவு பைபர் சிலையையும் அமைத்துள்ளார்..
இன்று காலை காரைக்குடி வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அந்த வீட்டில், 'இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது' என்று எழுதப்பட்ட பேனரை திறந்து வைத்தார். இந்த இடத்தில் மீண்டும் பெரியார் சிலையை நிறுவுவோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, 'காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை Doesn't செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.காரைக்குடியில் தனியார் வீட்டுவளாகத்தில் நிறுவப்பட்ட
பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட்ட வட்டாட்சியரும் காவல்துறை ஆய்வாளரும் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்
அவர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் உரிமை மீறலுக்கும் இது மட்டும் தண்டனையாகாது
முறையாக விசாரித்து அவர்களை குறைந்தபட்சம் பணியிடை நீக்கம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியிலிருந்தே எழுகிறது.
கருத்துகள்