திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார். இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது
“திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”திருவள்ளுவர் தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
திருவள்ளுவர் தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திருவள்ளுவர் போதித்த தெய்வீக ஞானமும் வாழ்க்கைப் பாடமும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தெய்வ பக்தியுடன் கூடிய வாழ்க்கைப் பாதையைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களிடையே, திருவள்ளுவரின் நூல்களை படிக்கும் ஆர்வத்தை நாடு தழுவிய அளவில் இந்த நாள் தூண்டட்டும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில்
இரணியன் திரு. நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும்,
கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதையும்,
திரு. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும்,
திரு. உபயதுல்லா அவர்களுக்குப் பேரறிஞர் அண்ணா விருதையும்,
திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதையும்,
முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருதையும்,
வாலாசா திரு. வல்லவன் அவர்களுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதையும்,
நாமக்கல் திரு. பொ. வேல்சாமி அவர்களுக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும்,
கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதையும்,
முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்குத் தேவநேயப் பாவாணர் விருதையும் வழங்கி வாழ்த்தியதோடு, வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் திட்டத்தின்கீழ் நிதியுதவியையும் தமிழ்நாடு முதல்வர் அளித்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம். என குறிப்பிட்ட முதல்வர் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கருத்துகள்