திரைப்பட நடிகர் வடிவேலு தாயார் வைத்தீஸ்வரி (என்ற) பாப்பா முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் காலமானவருக்கு
வயது 87. அவரது மரணம் குடும்பத்தினருக்குச் மத்தியில் சோகத்தை உறுவாக்கியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் ‘நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்’ தெரிவித்துகொண்டார். வடிவேலு தெரிவித்த போது "உடல்நிலை சரியில்லாமல் இருந்து தற்போது நன்றாகத் தான் இருந்தார்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் மார்பு சளி காரணமாக திடீரென்று பல்ஸ் இறங்கி விட்டது. பொங்கலுக்காக தான் ஊருக்கு வந்தேன். பொங்கல் முடியும் வரை யாரையும் அவர் தொந்தரவு செய்யவில்லை. மாடெல்லாம் புடிச்சுட்டு வாங்க அதுக்கப்புறம் தான் போவேன் என்று சொன்னார் எல்லா பண்டிகையையும் முடித்துவிட்டு அம்மா சென்று விட்டாள்'' என தனது தாயாரின் இறப்பு குறித்து வடிவேலு மனம் வருந்தி பேசிய காணொலி வைரலாகிறது. தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவையில் மட்டுமில்லாமல் பின்னணி பாடகருமாவார். 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ராஜ்கிரன் மூலம் அறிமுகம் ஆகி தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.இவரது தந்தை நடராஜ பிள்ளை ஏற்கனவே காலமான நிலையில் அவரது தாயார் தற்போது காலமானார் விரகனூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கருத்துகள்