எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசாக அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவிலைச் சேர்ந்தவர், அவர் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக உள்ளார், அவர் தற்போது திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலமான கூட்டணியின் வலுவான வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கே.பாக்யராஜ் தரப்பில் சொல்லப்பட்டாலும் அதிமுகவின் அணைத்துத் தலைவர்களும் ஒன்றுபட்டு நின்றால் தேர்தலில் களம் காண்பதற்குத் தயார் என சொல்லியதாகக் கூறப்படுகிறது. எனினும் ஆகும் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் எனச் சொல்லி, அவரை சம்மதிக்க வைக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முயற்சிகள் கடந்த நான்கு நாட்களாகவே நடந்து வருகின்றன.
கே.பாக்யராஜ் சம்மதிக்காவிட்டாலும், மூத்த தலைவர்கள் சிலர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது, .அவர் போட்டியிடத் திட்டவட்டமாக மறுத்தால் வேறு ஒருவரைத் தேர்வு செய்ய ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அணிட தயாராகிறது. ஒன்றுபட்ட அதிமுகவைத் தான் பாரதிய ஜனதா கட்சியும் அவர்களால் உடைந்ததை அவர்களே ஒட்டவைக்கும் முயற்சியில் கடந்து போன ஆறு மாதத்துக்கும் மேலாக முயற்சித்து வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. நடக்கப் போகும் ஈரோடு இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு மட்டுமே தங்களின் ஆதரவு என பகிரங்கமாக பாஜக அறிவிக்க உள்ளதாகத் தான் தற்போது செய்திகள் வருகிறது,
அதே போலவே, இயக்குனர் கே.பாக்யராஜும் ஒருங்கிணைந்த அதிமுக என்றால், தேர்தலில் போட்டியிடத் தயார் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவையே கே.பாக்யராஜ் விரும்புகிறார் என்பதை ஓரளவு நாம் அறிய முடிந்தது.. இப்போதும் அதே முடிவில் அவர் இருப்பதாகவும் தெரிகிறது. எனினும், கே.பாக்யராஜின் 'மனதைக் கரைக்க' ஓ.பன்னீர் செல்வம் அணியில் விடாமல் முயன்று வருகின்றனர். இறுதியில் நாளை அவர் இரட்டைஇலை இல்லாமல் எம்ஜிஆர் கலையுலக வாரிசு போட்டியிடுவாரா? இல்லையா ? என்பது தெரிந்து விடும்.
கே.பாக்யராஜ் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளான்கோவில் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாளின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு . தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடம் ஏற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பணியாற்றி திரைப்படக்கலை பயின்றவர். முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநராவார்.
கருத்துகள்