நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விமர்சித்தாரென அவரது மகள் அனிதா போஸ் பிஃபாஃப்
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் போற்ற பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டதற்காக வலதுசாரி அமைப்பை அவர் பாராட்டியதுடன் அவர் சில விஷயம் குறித்து சாடினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126 வது பிறந்தநாளை கொல்கத்தாவிலுள்ள ஷஹீத் மினார் எனுமிடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதன் சர்சங்க சாலக் மோகன் பகவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அதுகுறித்து குறிப்பிட்டவர், "என் தந்தை ஒரு பக்தியுள்ள ஹிந்துவாக இருந்தாலும், எல்லா மதங்களையும் மதித்து, அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என நம்பியவர். ஆர்எஸ்எஸ் அதை நம்புகிறதென்று நான் நினைக்கவில்லை, ”என அவர் கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு என் தந்தை நேதாஜியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், அது இந்தியாவுக்கு நல்லது. நேதாஜி மதச்சார்பின்மையை நம்பினார், ஆர்எஸ்எஸ் இந்து தேசியவாதக் கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், அது நேதாஜியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாது. அதற்கு நேதாஜி பயன்படுத்தப்பட்டால் நான் பாராட்ட மாட்டேன்,” எனக் கூறினார். மேலும்
“நிச்சயமாக அவர்கள் நேதாஜிக்கு வெறும் உதட்டளவில் பேசவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய 126 வது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுவதை நான் மதிக்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தின் நன்மைகளுக்கு, நேதாஜியின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்,” என தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார் மேலும் கூற்றுகளுக்கு பதிலளித்தார் மற்றும் நேதாஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை விமர்சித்தார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்றும் கூறினார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவம் துவங்கிய பின்னர், அது வளர்ச்சி கண்ட நிலையில் ஜப்பானிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றபோது விமான விபத்தில் ஜெர்மனியில் இறந்து போனார் என்பது தான் பலருக்கும் தெரியும். அவர் மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது ? என்பது குறித்து அரசும் தற்போது ஆய்வுகள் நடத்தும் நிலையில், அப்போதய காலத்தில் நேதாஜி ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தார்.
அந்தப் பெண்ணுக்கும் நேதாஜிக்கும் ஒரு மகள் பிறந்தார். அவர் தான் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார், இந்தியாவில் அப்போது ஒரிசா என்றும் தற்போது ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள், வங்காளத்தின் , ஹிந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். அவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்காள மன்னர்களின் சேனாதிபதியாக அதாவது படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியாகும்
அவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவருக்கு 8 ஆண் பிள்ளைகளும், 6 பெண் பிள்ளைகளும் கொண்ட குடும்பத்தில், ஒன்பதாவதாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். தந்தை ஜானகிநாத் போஸ்,தாயார் பிரபாவதி தேவி, மனைவி எமிலி செங்கல், மகள் அனிதா போஸ் ஆவார் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியன்று தைவான் நாட்டில் விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து வந்து 1985 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாகவும் பலவேறு வித கருத்துக்களும் .
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14. ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை எந்தவிதமான விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்த நாட்டு அரசு தெரிவித்திருப்பது, நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டிய நிலையில். இந்திய அரசால் நியமிக்கப்பட்டு அதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் தற்போது நாளை அவரது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அதை முன்னெடுத்து தற்போது நடந்த ஒரு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவரும் வீராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவருமான முன்னால் மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பேசிய போது "ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரி ஹிட்லர். இத்தாலியில் ஒரு சர்வாதிகாரி முசோலினி இந்தியாவில் பாஜக வில் இருக்கிறவர்கள் அத்தனை பேரும் ஹிட்லர், முசோலினியைப் போலவே இருக்கிறார்கள்.நான் ஜனசங்கம் மூலம் அரசியலில் நுழைந்தேன், நானாஜி தேஷ்முக் மற்றும் தத்தோபந்த் தெங்கடி ஆகியோரால் நான் அரசியலில் வளர்ந்தேன். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் மாதவராவ் முலே என்னைப் பதவியில் உயர்த்தினார். ஏபிவி மற்றும் நரேந்திர மோடியால் பாஜக தற்போது பரப்பும் இந்த சித்தாந்த பாரம்பரியத்தை நான் கைவிட மாட்டேன்". எனக் குறிப்பிட்டார் குறிப்பாக டாக்டர் மோகன் பகவத் உடன் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ராஜ்கோட்டில் நேற்று காலை ஹிந்து தர்ம ஆச்சார்யா சபாவிலிருக்கும் போது, இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.
கருத்துகள்