தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகம் உள்ளிடவைகளுக்குத் துணைவேந்தா்களை நியமித்து தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவு.
சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ்.ஆறுமுகம் நியமனம். இவா், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை உயா் அழுத்த ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராகவும், இயக்குநராகவும் பணியாற்றிவந்து . 25 ஆண்டுகளாக கற்பித்தல் பணியிலும், 15 ஆண்டுகள் நிா்வாகத் திறன் கொண்டவா்.
, 3 கட்டுரைகளையும், 19 சா்வதேச மற்றும் தேசிய கல்வி நிகழ்வுகளையும் நடத்தியவராவார். 220 சா்வதேச மற்றும் தேசிய ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா். சென்னை அறிவியல் அகாடமி இயற்பியல் அறிவியலுக்கான மூத்த விஞ்ஞானி விருது, அப்துல் கலாம் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்நாடு மாநில கவுன்சிலின் இயற்பியல் அறிவியலுக்கான தமிழ்நாடு விஞ்ஞானி விருதுகளையும் பெற்றுள்ளாா். மேலும், கல்வி, ஆராய்ச்சிக்காக 17 வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறாா்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 34 ஆண்டுகளாக கற்பித்தல் அனுபவமும், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிா்வாக அனுபவமும் உள்ளவர். 2 புத்தகங்களை எழுதியதோடு, 4 சா்வதேச கல்வி நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளாா்.
திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநா், நாமக்கல் என்.கே.ஆா். அரசு மகளிா் கல்லூரி முதல்வா், கரூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இவர்கள் இருவரையும் துணைவேந்தா்களாக நியமனம் செய்ததற்கான ஆணையை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினாா். இருவரும், துணைவேந்தராக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பிலிருப்பாா்கள்.
கருத்துகள்