நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு
வெளியாகியுள்ளதில், நடிகர் ரஜினிகாந்தினுடைய பெயர், புகைப்படம், குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாதென்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வழக்குறைஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் , பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளதனால் ரஜினிகாந்தின் அந்தஸ்திற்கு பங்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், ரஜினிகாந்தின் அனுமதியின்றி குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும் மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படுகிறார்.
அவர் 1996 ஆம் ஆண்டு அரசியல் களம் அவர் திசையில் இருந்தது ஆனால் அதை நழுவவிட்டு தற்போது காலம் கடந்து பாஜக முயன்று வந்த நிலையில் அதற்கு மறுத்த நிலையில் தற்போது தொந்தரவு வரக்கூடாது என்பதால் இந்த அறிவிப்பு என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து,ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் எனவும் காத்திருந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு , ஏமாற்றமாக தனது உடல் நிலையைக் காரணமாக , அரசியலுக்கு ஒரு கும்பிடு போடுவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3 அம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த் , திடீரென உடல்நிலையை காரணம் காட்டி, வரப்போவதில்லை என்று அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மட்டுமல்ல ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றம் 70 வயதிலும் சுயநலமாக வாழும் ஒருவரை
Restrictions கொண்டாடும் ரசிகர்கள் தான் தமிழ்நாட்டுக்கான சாபக்கேடு.தற்போது அரசியல் தொந்தரவு காரணமாகவே தனது பெயர் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வரக் காரணம் என்பதே மக்கள் மத்தியில் பேச்சாகிறது.நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு வெளியாகியுள்ளதில், நடிகர் ரஜினிகாந்தினுடைய பெயர், புகைப்படம், குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாதென்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அறிவித்துள்ளார்.
கருத்துகள்