தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியான 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது
இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளதன் படி, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய்) 2023 ல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 8 (புதன்) பிப்ரவரி 2023 ல் நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற 10 (வெள்ளி) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 27 (திங்கள்) பிப்ரவரி 2023 ல் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெறும். திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம்.27ஆம் தேதியில் தேர்தல் மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு காங்கிரஸ் சட்டமன்றப் பேரவை உறுபு திருமகன் ஈவெரா காலமானதை யடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், ஈரோடு கிழக்கு தொகுதி 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின் போது உருவாக்கப்பட்டதன்பின்னர் 2011, 2016, 2021 ஆகிய ஆண்டு நடைபெற்ற மூன்று சட்டமன்ற தேர்தல்களில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பளார் திருமகன் ஈவெரா (வயது 46), திமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். இவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கொள்ளு பேரனும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஒன்றிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன்.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த தேர்தல் விதிமுறைப் படி, தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டபேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலோடு இணைத்து தமிழ் நாட்டின், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 31ஆம் தேதி முதல் தொடங்கும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் புதிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. இது தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளரை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்கு சாவடிகள் உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 1,10,713, பெண்கள் - 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் 23 பேர். இடைத்தேர்தலின்போது அங்கு 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு இருக்கும் தொகுதியாக இருந்தால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கினைக்க மாநில அளவிலான குழு அமைக்கப் பட்டுள்ளது.
அவர்களுடைய பணிகள் சிறக்க பாஜக மாநில தலைவர் கே.. அண்ணாமலை.வாழ்த்தியதும் மற்றும் திமுக சார்பில் அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கடைசியில் கட்சிக்கு தொகுதி ஒதுக்கி திமுக அறிவித்துள்ளது.முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாகாலமாகிய பின் அதிமுக ஐந்து பிரிவாக உடைந்த நிலை எதிர்க்கட்சியில் கடும் குழப்பம் . எடப்பாடி கே பழனிசாமி அணி ஓ.பன்னீர்செல்வம் ஆணி மட்டுமே பனிப்போர் நீடிக்கிறது. மற்ற அணிகள் இணைந்து செயல்படும் நிலை இல்லை கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா என்ற வாசன் அணி போட்டியிட்டு தோல்வியைச் சந்திதத நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தரப்பும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தரப்பும் வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பாக இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி தர்மத்தை மதித்து தமாகா போட்டியிட அதிமுக உதவ வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தினர் அதன் பின்னர் விலகினார்.
கருத்துகள்