இந்திய நாடகப் பெருவிழாவின் 22-வது பகுதியை பிப்ரவரி 16 முதல் 23, 2023 வரை நடத்துவதற்கு தேசிய நாடகப்பள்ளி ஏற்பாடு செய்துள்ளது
இந்திய நாடகப் பெருவிழாவின் 22-வது பகுதியை பிப்ரவரி 16 முதல் 23, 2023 வரை நடத்துவதற்கு தேசிய நாடகப்பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி சிறப்பு மிக்க சர்வதேச நாடகப்பெருவிழா தில்லி, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி, ராஞ்சி, குவஹாத்தி, ஜம்மு, ஸ்ரீநகர், போபால், நாசிக், கெவாடியா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. நிறைவுவிழா கெவாடியாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய தேசிய நாடகப் பெருவிழா என்பது மற்ற நாடுகளுடன் கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாக கொண்டுள்ளது. நாடக கலைஞர்கள் மட்டுமின்றி பிரபல இயக்குநர்களும், இப்பெருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள்