முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார். அவரது வயது 95.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்த பழனியம்மாள். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை மோசமாகி வந்ததற்காக சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றுமுன்தினம் தனது தாயாரைப் பார்க்க பன்னீர்செல்வம் பெரியகுளம் சென்றார்.நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு வந்த நிலையில் தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தாயார் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது தாயின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் விரைந்தார். பெரியகுளத்தில் அவரது தாயார் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.
கருத்துகள்