தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செயத தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலாயவராக கே.பி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக தீபக் ஜேக்கப் நியமனம், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக இரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஜெயசீலனும் நியமனம். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவவராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக ஸ்ரீதர் நியமனம். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரான மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகவும்
.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும்,. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரான ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரான குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராகவும் பணி மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக ஷாஜிவாணா ஆகியோரும், கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவராக கிராந்திகுமார், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவராக மகாபாரதி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்