அரசியலில் சர்க்கார் வில்லன் நடத்தும் சர்க்கஸ் பார் விளையாட்டு.
1943 ஆம் ஆண்டில் காரைக்குடியில் பிறந்த பழ. கருப்பையா அரசியல்வாதி, எழுத்தாளர் நடிகர் விமர்சகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து அக்கட்சி 1969 ஆம் ஆண்டு பிளவுபட்ட போது கு.காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸில் சேர்ந்தார் 1971ஆம் ஆண்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.
1975 ஆம் ஆண்டில் முன்னால் முதல்வர் கு.காமராசர் காலமான பின் ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர்
ஜனதா கட்சி பிளவுபட்டது 1982 ஆம் ஆண்டில் ஜனதா தள் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுத். தோல்வியடைந்தார்.
1988 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். பின் அங்கிருந்து
1992 ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக தொடங்கியதில் இணைந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார்.
1994 ஆம் ஆண்டில் காரைக்குடி குடிநீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு 19 நாள்கள் திருப்பத்தூருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 1996 ஆம் ஆண்டில் மதிமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியான
பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார். பின்னர் சிறிது காலத்தில் அங்கிருந்து விலகி
2010 ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையில்அதிமுக வில் சேர்ந்த பின் இலக்கிய அணியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் திமுகவைத் தாக்கி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக அப்போது திமுகவினரால் தாக்கப்பட்டார்
பின் அதிமுகவின் சார்பாக சென்னை துறைமுகம் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் அதிமுகவை தாக்கிப் பேசியதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்ற குற்றம் சாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த நாளே தன் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர். அதைத் தொடர்ந்து அப்போது அவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். அதன் பின் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல் செய்திகளை வெளியிட்டார்.
பின்னர் முன்னால் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதியில் சேர்ந்தார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, "கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்" என்று அறிக்கை விடுத்து திமுகவிலிருந்து விலகினார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிட்டவர் தோல்வியாகி பின் இப்போது ஒரு கட்சி துவக்கினார் பல கட்சி பழ கருப்பையா தனியாக ஒரு கட்சி துவங்கினார் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராவார்.சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது: நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.
வணிகமாக மாறிவிட்ட அரசியலை சமூகப்படுத்துவதே இக்கட்சியின் நோக்கம்.காந்தியத்துவம் தான் இக்கட்சியின் மையம். கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைத்து மீனவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை விட, வீராணம் போலுல்ள பெரிய ஏரியை உருவாக்கி அதற்கு கருணாநிதி பெயரைச் சூட்டலாம். இந்து சமய அறநிலையத் துறையை தமிழ் சமயங்கள் அறநிலையத் துறையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
எங்கள் கட்சியின் முதல் தொண்டர்கள் மாநாடு பிப்ரவரி மாதம்.5-ஆம்தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறதென்றார். இச்சந்திப்பில் இவரது கட்சி நிர்வாகிகளாக ராஜ்குமார், முத்துராமலிங்கம், வாசி சி.ரவி, அகஸ்டின், மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்