அதானி குழுமம் விவகாரங்களில்
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்ற நிலையில் அமளி ஏற்பாடு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இது இப்போது கவனம் பெறுகின்றன உண்மை நிலை குறித்த ஆய்வு தான் இப்போது மக்கள் அறியத் தேவை என்பதால்,நாம் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக
இந்தக் கட்டுரையில் காணலாம் :- கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 2 சதம் சரிவாகி. முடிவில் சென்செக்ஸ் 874.16 புள்ளிகள் அல்லது 1.45 சதம் சரிவினக் கண்டு, 59,330.90 புள்ளிகளாக முடிவடைந்தது. இதே நிஃப்டி 287.60 புள்ளிகள் அல்லது 1.61சதம் சரிவினைக் கண்டு, 17,604.35 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இந்த வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், சர்வதேசச் சந்தை நிலவரம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளின் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சமென பல காரணிகளுக்கு மத்தியில்
வரும் வாரத்திலும் இந்த நிலை தொடரலாமோ என அச்சமிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 23 முதல் 27 ஆம் தேதிகளுக்கிடையில் அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை முறையே சுமார் 7 சதம் சரிவிலும், அதானி பவர் பங்கானது 10 சதம் சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20 சதம் சரிவிலும், இதே அதானி டிரான்ஸ்மிஷன் 27 சதம் சரிவிலும், இதே அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, முறையே 25 சதம் மற்றும் 23 சதம் சரிவினைக் கண்டுள்ளது.. அது குறித்து சாமானிய மக்கள் புரிந்து கொள்ள ஒரு விளக்கம், நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள். பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைக்க உங்களுடன் ஒரு கும்பல் சேர்ந்து பிரச்சாரம் செய்து
இடத்தின் விலை மிகவும் உயர்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு விற்கத் தயாராக உள்ளது என்று கூறுகிறது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது சதம் பங்கு. ஒரு லட்சம்!
செலவழித்துவிட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
இந்த அறுபது லட்சம் ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குங்கள். பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது. எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறார்கள்.
எனவே ஒரு பத்து அல்லது பதினைந்து சுழற்சிக்குப் பிறகு, நீங்கள் உலகின் பணக்காரர் ஆகி விடுவீர்கள். அது காகிதத்தில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்
இப்போது யாரோ ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் இடத்தில் தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன நடந்திருக்கும் ?
எல்லாம் செயின் கிராக்கர் போல உடைந்து விடும். இதைத்தான் அதானி எளிமையாகச் செய்தார் என்று ஹிண்டன்பெர்க் ஆய்வு விபரம் கூறுகிறது,
இந்திய வரி செலுத்துவோர் பணத்தைக் கொள்ளையடித்த 28 இந்திய நாட்டு தொழிலதிபர்களின் பெயர்களாக
ஆஷிஷ் சுரேஷ் பாய், மெஹுல் சோக்ஸி, நிரவ் மோடி, நிஷான் மோடி, புஷ்பேஷ் பைத்யா, ஆஷிஷ், சன்னி கலரா, ஆர்ட்டி கலரிங், சஞ்சய் கலாரா, சுதீர் கலரா, ஜாதின் மேத்தா, உமேஷ் பரீக், கமலேஷ் பரீக், நிலேஷ் பரீக், வினய் மித்தல்,
ஏகலவ்யா கர்க்,
சேத்தன் ஜெயந்திலால்,
நிதின் ஜெயந்திலால்,
தீப்தி பெயின் சேத்தன், சாவியா சைத், ராஜீவ் கோயல்,
அலகா கோயல்,
லலித் மோடி,
ரித்தேஷ் ஜெயின்,
ஹிதேஷ், நாகேந்தர்பாய் படேல்,
மயூரிபைன் படேல், விஜய் மல்லையா,
ஆகியோர் வழியில் இழந்துபோன நாட்டின் மொத்தத் தொகை
10,00,000/- (பத்து லட்சம் கோடி ரூபாய் மட்டுமே)
மக்கள் பணத்தை எப்படிக் கொள்ளையடித்தார்கள் இந்த வர்த்தக அரசியல் வாதிகள்
இந்த முக்கியமான மிகப்பெரிய கொள்ளைக்குத் துணையாக இருந்தது யார், யார்? இந்த செய்தியை
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை உண்டு !
.ஆனால் இது இங்கு வேறு விதம் ..அதானி குழுமத்தில் உரிமைப் பங்கு வெளியீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தவே ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அதானி குழுமத்தின் சரிவில் பலனடைய இப்படிச் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்ததற்கிடையில் தொடர்ந்து சரிந்து வரும் பங்குகளின் மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதியும், சந்தையின் போக்கினை கருத்தில் கொண்டும் FPO-வினை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் திரும்பக் கிடைக்கும் எனலாம். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாகவும் அமையும். மொத்தத்தில் அதானி குழுமத்தினால் பணம் போச்சே என நினைத்தவர்களுக்கு, அதானி குழுமம் பணத்தை திரும்பக் கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இது அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிவிப்பால், 25 சதவீதம் வரையில் அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டது. தற்போது வரையில் இந்த சரிவில் இருந்தும் மீண்டபாடாக இல்லை எனலாம்.ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையால் அதானி குழுமம், தொடர்ந்து தனது சந்தை மதிப்பினை இழந்து வரும் நிலையில், உலக பில்லியனர்கள் பட்டியலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அதானி குழுமத்தில் இத்தகைய குழப்பங்களுக்கும் மத்தியில், எஃப் பி ஓ முழுமைக்குமான பங்குகளுக்கு விண்ணப்பத்தினை அதானி குழுமம் பெற்றது தான். இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் புதியதாக ஒரு முதலீட்டுத் திட்டம், அன்னிய நிறுவனங்கள் கூட அதானி குழுமத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என கூறி மிகப்பெரிய முதலீட்டினை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது அதானி குழுமத்திற்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம், நாளுக்கு நாள் எங்களது பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக உள்ளது. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நாங்கள் முதலீட்டாளர்களின் நலனை கருதி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளோம்.ஆக பெறப்பட்ட முதலீடுகளை திருப்பி அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கையிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இன்னும் சில தினங்களில் இந்த பணம் உங்களுக்கு திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.
கருத்துகள்