அறக்கட்டளை நிதியில் அரசியல் நடத்தும் பாமக நிறுவனர் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற அரசியல் சார்பற்ற அறக்கட்டளை உள்ளது அதன் சார்பில்
’’தமிழைத் தேடி” என்ற விழிப்புணர்வுப்
பரப்புரை பயணம் செய்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அதற்காக அறக்கட்டளை சார்பில் காவிக் கலரில் புதிய பேருந்து உறுவாக்ப்பட்டுள்ளது அதற்கு தனியாக ஒரு பாடல் கவிஞர் ஜெயபாஸ்கரன், இசையமைத்து புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி
ஆகியோர் பாடியுள்ளார்கள் ,39 நாட்களில்102 மாவட்டங்களைச் சேர்ந்த 6,708 நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கிய பா.ம க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் நியமனக் கடிதங்களை வழங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி திண்டிவனம் அடுத்த மருத்துவரின் தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் தொடங்கியது. அன்று முதல் பிப்ரவரி மாதம் 09-ஆம் தேதி வரை 39 நாட்கள் நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் பணி நடைபெற்றதில் மொத்தம் கட்சியின் பிரிக்கப்பட்ட 102 மாவட்டங்கள், 217 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 6,708 புதிய நிர்வாகிகளுக்கு நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் நியமனக் கடிதங்களை வழங்கினார்கள். அனைவரும் தங்களுக்கான பணியை மற்ற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் அதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றும் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அந்தப் பாடல் வரிகளை நாம் இங்கே காணலாம். :
"தமிழைத் தேடி தமிழரை நாடி
தமிழினப் போராளி வருகிறார்!
எங்கே நமது தமிழ்?
எதிலே நமது தமிழ்?
என்றே அய்யா நம்மைக் கேட்கிறார்!
எங்கும் தமிழ் இல்லை எதிலும் தமிழ் இல்லை
தங்கத் தமிழ் எங்கே என்று
தேடுகிறார் - தமிழைத் தேடி தமிழரை நாடி( அடுத்த தேர்தல் காரணமாக அரசியல் செய்ய ) ..?!
கல்வி மொழியாக தமிழ் இல்லை
கடவுள் மொழியாக தமிழ் இல்லை
வணிக மொழியாக தமிழ் இல்லை
வழக்கு மொழியாக தமிழ் இல்லை!
எங்கும் இல்லை இல்லை என்பதே
இன்னுயிர்த் தமிழின் இழிந்த நிலை
தாய்மொழித் தமிழை தள்ளி வைத்ததால்
தமிழர்கள் வாழ்வில் தாழ்ந்த நிலை -தமிழைத் தேடி தமிழரை நாடி
உலக மொழிகளில் உயர்ந்த மொழியென்ற
உண்மையைச் சொல்லியும் பயனில்லை,
தரணியே போற்றும்
தமிழ் மொழி அன்னைக்கு
தமிழ் நாட்டில்தான் வாழ்வில்லை!
ஒன்பது கோடி தமிழர்கள் யாவருக்கும்
ஒற்றைத் தமிழே அரணாகும்
எல்லா மொழிக்கும் கம்பளம் விரித்தால்
உள்ளவையெல்லாம் பறிபோகும்! - தமிழைத் தேடி தமிழரை நாடி
பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை
பலமொழி மோகம் பெருந்தொல்லை
அறியா மொழியில் கற்பதனாலே
அறிவை இழக்கிறான் நம் பிள்ளை!
அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றியும்
அன்னைத் தமிழ் ஏன் ஆளவில்லை
இன்னுயிர் தமிழுக்கு
தன்னுயிர் தந்தவர்
ஈகம் இன்னுமா போதவில்லை? - தமிழைத் தேடி தமிழரை நாடி
எங்கே எங்கே என்னுயிர்த் தமிழென
எங்கள் அய்யா கேட்கின்றார்
தமிழர் தொலைத்த தமிழைத் தேடி
தமிழினப் போராளி வருகின்றார்!
தமிழின மக்களே வாருங்கள் - நம்
தமிழின் நிலையைப் பாருங்கள்
சொந்த மண்ணிலே எங்கள் தமிழ்த்தாய்
ஏதிலியா எனக் கேளுங்கள்!
தமிழா தமிழின் பெருமையறி-உன்
தமிழால் முடியும் என்று விழி
தமிழினம் உலகில் தலைநிமிர -நம்
தமிழைத் தவிர ஏது வழி?
தமிழுக்காகத் தளராதுழைக்கும்
தமிழ் இனத்தின் நம் மருத்துவரை
அய்யா வருக! வருக! என்று
அழைக்குது பார் நம் மாமதுரை!
மருத்துவர் அய்யா தலைமையிலே - நம்
தமிழை வளர்த்த மதுரையிலே
ஒன்று கூடுவோம் தமிழர்களே- நாம்
வென்று காட்டுவோம் தோழர்களே - தமிழைத் தேடி தமிழரை நாடி எனப் பாடியுள்ள பாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் கடந்த ஐந்து வருடம் தமிழ் மீது வராத அக்கறை தற்போது ஆரம்பமகால தமிழாசிரியர் பின் மருத்துவர் வன்னியர் சங்க அறக்கட்டளைகளின் காவலர் என. பல ரூபங்கள் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களுக்கு உண்டு தற்போது அறக்கட்டளைகளின் நிதியை அரசியலில் பயன்படுத்த முயலும் செயல் பலரும் யோசிக்க இந்தி திணிப்பை தடுக்காமல் தமிழை அய்யா சார்ந்தவர்கள் எங்கு வளர்ப்பார்கள் என மாற்றுக்கட்சியினர் பேசுவது நம் காதில் விழுகிறதே..இதில் பொது நீதி யாதெனில் அவரை நாம் நெருங்கி நன்கு அறிந்தவர்கள் என்ற முறையில் இராமம் போட்ட செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைகள் போல பொங்குதமிழ் வளர்ச்சி மற்றும் வன்னியர் கல்வி அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல பல மருத்துவர் அய்யாவின் அரசியலில் கைவந்த கலை வித்தகரே..!
கருத்துகள்