திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (27-03-2023) ல் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாகத் தங்களுக்குத் தரப்பட்ட கடமைகளை ஆற்ற வந்திருந்த, சிவகங்கை சமஸ்தானத்தின் சில பகுதி நாட்டு அம்பலங்கள் தங்களின் அரசியும் பரம்பரை அறங்காவலருமான இராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியாரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வணங்கினர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோவில்களில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் சமேத ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் கோயில் ஜீர்ணோத்தாரண புனர் அஷ்ட பந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக விழா,
சிவகங்கை சமஸ்தான இராணியார் மேன்மை கொண்ட ஸ்ரீ மதி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமையில் 23-03-2023 முதல் 27-03-2023 முடிய நடைபெற்றது.தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார்.
இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரணியனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.திருமாமகள் தாயாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. திருமாலின் 4000 திவ்யப்பிரபந்த மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104 வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியா நாராயணப் பெருமாள் திருக்கோவில் நடைபெற்று வரும் மகா சம்ப்ரோஜனத்தில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவரது துணைவியாருடன் யாகசாலையில் தரிசனம் செய்து பெருமாள் அருள் பெற்றார்கள் அதனை தொடர்ந்து #சிவகங்கை_சமஸ்தானம்_ராணியார் சார்பாக சிவகங்கை சீமை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
கருத்துகள்