சென்னை சைதாப்பேட்டை பகுதி வழக்குரைஞர் ஜெய்கணேஷ்
படுகொலை செய்யப்பட்டார். சில மாதங்களில் தூத்துக்குடி வழக்குரைஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்குரைஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்குரைஞர் சிவகுமார் எனத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து இதுபோன்று நடைபெறும் படுகொலைகளை கண்டித்தும், உடனடியாக
ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போன்று தமிழகத்திலும் சட்டமியற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நாளை 29 3 2023 புதன்கிழமை நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்து அறிவிக்கப்படள்ளது.
ஆகையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது. என. JAAC. சார்பில் அறிவிப்பு
கருத்துகள்