குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய பல்வீர் சிங் உள்ளிட்ட நபர்கள் குற்றம் குறித்து விசாரிக்க உயர் அதிகாரி நியமனம்
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும்
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்திய விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம்
ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற எண்.69/2023 வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு. தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டனர்.
அதுதொடர்பாக அரசின் காவல் நிலை ஆணை 151-இன் கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26 மார்ச் 2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக பல்வீர் சிங் 29.மார்ச் .2023 ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், போக பூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், எம்.சந்தான குமார், தலைமைக் காவலர்,
அம்பாசமுத்திரம் காவல் நிலையம், வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, முதற்கட்ட விசாரணை அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.ஏப்ரல் .2023 ஆம் தேதியன்று சமர்ப்பித்தார்.
நிலையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வர பெற்றதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04.ஏப்ரல் .2023 ஆம் தேதி தமிழ்நாடு அரசிற்குப் பரிந்துரை செய்தார். அதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு விசாரணை அதிகாரியை நியமனம் செய்துள்ளது. அதில், பணியிடை நீக்கத்திலுள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஐபிஎஸ் மீதும், மற்ற காவல் அதிகாரிகள் பணியாளர்கள் மீதும் விசாரணை கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப் பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில்
பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப் பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணையை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா ஐஏஎஸ்ஸை அரசின் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி மற்றும் அந்த கட்சிகளுக்கு முட்டு கொடுப்பவர்கள் என அனைவரும் பல்வீர்சிங் விஷயத்தில் கடும் மௌனத்தில் இருக்கின்றனர். தொலைக்காட்சி விவாதங்களும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதில் தான் கவனமாக இருக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து பேசி வரும் மீதம் உள்ள சில பத்திரிக்கையாளர்களையும் அமைதியாக்கும் முயற்சியிலும் உயர் அமைப்பு இறங்கியுள்ளது குறித்து பலரும் புகார் கூறிய நிலையில்.
ஆனால் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது இது வரை ஒரு வழக்குக் கூட பதியப்படவில்லை. புகார் கொடுத்தவர்கள் கடத்தப்படுகிறார்கள் எனவும் புகார் கொடுக்க முன் வருபவர்கள் மிரட்டப் படுகிறார்கள் எனவும், விசாரணை கமிஷன் பொறுமையாக விசாரித்து அறிக்கை அளிக்கும் வரை இதற்கு ஒரு தீர்வு வராது என்ற நிலையில் தான் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விசாரணை உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் பல்வீர்சிங் பல் உடைத்ததாக புகார் அளித்து பிறகு விசாரணை ஆணையத்தில் கீழே விழுந்து தான் என்னுடைய பல் உடைந்தது என்று மாற்றிக் கூறியவரை கடத்தி வைத்துள்ளதெனவும்,
இந்த வழக்கில் காவலர்கள் தண்டிக்கப்பட்டால் இனி விசாரணைக்கு வருபவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கின் போக்கை மாறற சிலர் பேனர் அடித்து பல்வீர்சிங் ஒரு நல்லவர் வல்லவர் என்று விளம்பரம் கொடுக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கியுள்ளது பலர் அறிந்ததே,
இதில் தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த தமிழ்நாடு முதல்வர் இந்த கடத்தல் சம்பவம் குறித்தும் சிறப்பு விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை
கருத்துகள்