நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகனின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்துள்ளார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு;
"நேற்று மாலை நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் இதோ..."பல்வேறு விழாக்களை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்
பல்வேறு விழாக்களை முன்னிட்டு அவை தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம், தில்லி சேக்ரெட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டங்கள், மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற கணேஷ் உற்சவ நிகழ்ச்சி மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் இல்லத்தில் நடைபெற்ற பிஹு கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளில் திரு. ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்.
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சரின் ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் கலாச்சார துடிப்பும் பன்முகத்தன்மையும் நம்மை வலுவாக்குகிறது. மக்கள் மத்தியில் இருந்து அவர்களது தனித்துவமான பாரம்பரிய அம்சங்களைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்“பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டையொட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்’’.மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டுக்கு பிரதமர் வாழ்த்து
மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
"மஹா பிஷுபா பானா சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியானதாக அமையட்டும்’’மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டுக்கு பிரதமர் வாழ்த்து
மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
"மஹா பிஷுபா பானா சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியானதாக அமையட்டும்’’வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நாபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
ஏப்ரல் 14, 15- 2023 அன்று கொண்டாடப்படும் வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த விவசாயிகளின் விழாக்கள், இந்தியாவின் செழுமையான, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த விழாக்கள் நமது உணவளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பைப் போற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாகும்.
இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், நமது மக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்பவும் நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம்:
“பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு ஆகிய மகிழ்ச்சியான விழாக்களையொட்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான, மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள் நமது பன்முக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இவை ஒற்றுமை, நல்லிணக்க, சகோதரத்துவ, உணர்வின் அடையாளமாக இருக்கின்றன.
இயற்கையின் செழிப்பையும், அறுவடையின் கொடையையும் நாம் கொண்டாடும் தருணத்தில் இயற்கை அன்னையுடனான நமது உறவை நாம் ஒரு கணம் பிரதிபலிக்கவேண்டும். நம்மை பாதுகாக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்கும் நமது பொறுப்பையும் உணரவேண்டும். நமக்கு உணவையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கு அயராது பாடுபடும் நமது விவசாயிகளின் அர்ப்பணிப்புக்கு மிகுந்த மதிப்பையும், நன்றியையும் நாம் உரித்தாக்க வேண்டும்.
இந்த நன்னாளில் நமது மகத்தான தேசத்தை அடையாளப்படுத்தும் ஒற்றுமை, பன்முகத்தன்மை, அனைவரையும் உட்படுத்துதல் என்ற மாண்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை நாம் வலுப்படுத்துவோம். நமது பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுவோம். நமது மனிதாபிமானத்தைப் பகிர்வோம்.
இந்த விழாக்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.”
கருத்துகள்