இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் "மானக் மந்தன்" -கலந்துரையாடல் நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை பிஐஎஸ் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு - அதற்கான தேவைகள் ஐஎஸ்-26001” என்ற தலைப்பில் சென்னையில் இன்று (18 ஏப்ரல் 2023) மானக் மந்தன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. கம்பெனிகள் சட்டம் 2013 - பிரிவு 135, 2023-ன் படி ,இந்தியா, பெருநிறுவன சமூகப் பொறுப்பை (CSR) கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் முன்னோடி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக செயல்படுத்தல், அறிக்கையிடல் மற்றும் நேரடி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் செயல்திறனை ஒரே மாதிரியாக மதிப்பிடுவதற்கான உடனடித் தேவை எழுந்துள்ளது. இந்திய தரநிர்ணய அமைவனம் நாட்டில் “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு” என்ற தலைப்பில் இந்திய தரநிலையை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்த தரநிலையானது, ஒரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு கட்டமைப்பை திறம்பட நிறுவ உதவுகிறது, இது பொருத்தமான செயல்முறை மற்றும் நடைமுறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயனுள்ள நெறிமுறையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒட்டுமொத்த நோக்கத்துடன் உருவாக்கப்ட்டுள்ளது. இந்த தரநிலையானது அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் அவற்றின் அளவு, வணிகத்தின் தன்மை மற்றும் சிஎஸ்ஆர் திட்ட செயல்பாடு மற்றும் சிஎஸ்ஆர் பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து பொருந்தும். நிலத்தின் சட்டங்களால் செயல்படுத்தும் / வரையறுக்கப்பட்ட நிறுவனங்களைத் இந்த தர நியமம் பொருந்தாது.
நிகழ்ச்சியில் சிஎஸ்ஆர் தொடர்புடைய 70 க்கும் அதிகமான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர் . புதுதில்லி பிஐஎஸ் விஞ்ஞானியும், மேலாண்மை அமைப்புகள் துறை தலைவருமான திரு அனுஜ் பட்நாகர், கௌரவ விருந்தினராகவும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அரவிந்த் குமார் நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
சென்னை பிஐஎஸ் விஞ்ஞானி மற்றும் துணைத் தலைமை இயக்குனர் (தெற்கு மண்டலம்) திரு யுஎஸ்பி யாதவ், சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி மற்றும் இயக்குனருமான திருமதி. ஜி.பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிஐஎஸ் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் அமர்வுகளை கையாண்டார்
கருத்துகள்