குடிகாரர்கள் மது, குடிக்க இனி மதுக் கடைக்குப் போக வேண்டாம்.
மாற்றாக இதற்கு (ATM) போன்ற ALM வந்துவிட்டது காலை கட்டினால் பால்,கறந்துவிடும்பசுவைப் போல
காசைக் காட்டினால் சாராயப் போத்தல்
கறந்து விடும் மிஷின் வந்ததனால், கொஞ்சம் ஊறுகாயும்,ஓரமா.
வர்றமாதிரி ஒரு கண்டுபிடிப்பு வேண்டும் என்பது குடிகாரர்களின் ஆசை அதற்கு ஒரு மெஷின்வைத்தா? நல்லாயிருக்கும் என்பது குடிகாரர்களின் ஆசை கொஞ்சம்!
கெஞ்சி கேட்டு கொள்வதாக அவர்கள் வேறு அந்த வழியில்
ஓட்டுகள் நிறையவே விழும்! சென்னையில் 4 தனியார் வணிக வளாகங்களில் டாஸ்மாக்கின் தானியங்கி மதுவிற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடன் அல்லது பற்று அட்டை மூலம் பணம் செலுத்தி, தொடு திரை கணினியில் விரும்பிய மது வகையைத் தேர்வு செய்தால் அடுத்த வினாடி அந்த மதுபோத்தல் , ஏ.டி.எம்.களில் பணம் வருவதைப் போன்று ALM மூலம் அவர்கள் கைகளுக்கு வந்து விடுகிறம்.
ATM மாதிரி.. அது ALM தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்ட பலர் வினா எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மருத்திவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் 4 தனியார் வணிக வளாகங்களில் டாஸ்மாக்கின் தானியங்கி மதுவிற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடன் அல்லது பற்று அட்டை மூலம் பணம் செலுத்தி, தொடுதிரை கணினியில் விரும்பிய மது வகையை தேர்வு செய்தால் அடுத்த வினாடி அந்த மதுபுட்டி, ஏ.டி.எம்.களில் பணம் வருவதைப் போன்று நமது கைகளுக்கு வந்து விடுமாம்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இத்தகைய விற்பனை நிலையங்களை திறக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை நினைக்கவும் பேசவுமே அருவருப்பாக உள்ளது. இது சட்டவிரோதம் ஆகும். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால், அதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விற்பனையாளர்களின் மேற்பார்வையில், கடைகளுக்கு உள்ளேயே இந்த எந்திரம் வைக்கப்பட்டிருப்பதால் 21 வயதுக்கு குறைவானவர்கள் எந்திரத்திலிருந்து மதுவை எடுக்க முடியாது என்று டாஸ்மாக் விளக்கம் அளித்திருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதிக விலைக்கு மது விற்கப்பட்டால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மதுக்கடைகளை மூடிவிடலாம்.
அதை விடுத்து தானியங்கி மது வழங்கும் எந்திரம் வைப்பதாகக் கூறுவது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல். தானியங்கி எந்திரத்தை மது விற்பனையாளர்கள் எல்லா நேரமும் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தைகள் பணத்தை செலுத்தி எளிதாக மதுவை எடுத்துச் செல்ல முடியும். தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும்.
எந்த ஒரு வணிகத்திலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் போது அதைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுவது இயல்பு. தானியங்கி மது வழங்கும் எந்திரங்களுக்கும் அது பொருந்தும். அதனால் அதிகமாக மது விற்பனையாகும்; குடிப்பழக்கமும் அதிகரிக்கும். இந்திய அரசியல் சட்டத்தின் 47 ஆவது பிரிவுக்கும், முதலமைச்சர் அறிவித்த நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) 3.5 பிரிவுக்கும் எதிரானது.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களை தானியங்கி எந்திரம் மூலம் விற்பனை செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) தடை விதித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது இந்தியாவிலும் தடையை நடைமுறைப்படுத்திய நிலையில். அது மது விற்பனைக்கும் பொருந்தும். ஒரு மாநில அரசு மதுவிற்பனையை கட்டுப்படுத்தும் செயல்களில் தான் ஈடுபட வேண்டுமே தவிர, மதுவிற்பனையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. மக்களின் காவலராக இருக்க வேண்டியதாக உள்ள அரசு அறநெறி தவறாதவர்களைச் சேரும். ஆனால் அது தற்போதய காலத்தில் சரிவரப் பொருந்துமா என்பதே.
கருத்துகள்