சிறுபான்மை இன மாணவர்களின் கல்வி உதவித்தொகை குறித்த மத்திய அமைச்சரின் கடிதம்
சிறுமான்மையின மாணவர்களின் நலனுக்கு எதிரானதென
மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்து.
ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது இரமலான் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டிய நேரம். ஆனால் இஸ்லாமிய மாணவர்களின் களின் எதிர்காலம் பற்றியும் பேச வேண்டியுள்ளது.
முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையான Pre Matric Scholorship என்பது நிறுத்தப்பட்டது குறித்து மத்திய அரசின் சிறுபான்மை இன நல அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு 28 நவம்பர் 2022 அம் தேதியில் அன்று அவர் கடிதம் எழுதியதற்கு அமைச்சர் 29.மார்ச் .2023 ஆம் தேதியிட்ட பதில் ( SS-14/3/2020- Scholorship- MoMA - P - 3) ஐ அனுப்பியுள்ளதாகவும் .
அதில் எதற்காக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை சமூகங்களை சார்ந்த மாணவர்கள் துவக்க நிலை, இடை நிலை கல்வி பயில்வது தேசிய சராசரிக்கு இணையாக இருப்பதாகவும். 1 - 8 வகுப்பு மாணவர் சராசரியை காண்பித்துள்ள அமைச்சர் பதில் ஏதோ சிறுபான்மையினர் சமத்துவத்தையே எட்டி விட்டார்கள் என்ற பிம்பத்தை கட்டுவது சிறுபான்மை "நல" அமைச்சகத்திற்கு அழகல்ல. எனவும்
இரண்டாவதாக ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு 1 மதல் 8 வகுப்புகளுக்கு கல்வித் தொகை வழங்கப்படாததால் ஒரே அளவுகோலுக்கு சிறுபான்மையினரையும் கொண்டு வருகிறார்களாம். ஒரே அளவுகோல் எனில் இதர விளிம்பு நிலை மக்களில் யார் யாருக்கு இந்த பயன் என்பதை விரிவாகக் கூற வேண்டும் ஆகவே கொடுத்துச் செய்ய வேண்டியதை பறித்து செய்வது "நல" அமைச்சகத்தின் அணுகுமுறையாக இருக்கலாமா எனவும்,
மேல் நிலைக் கல்வி பயிலும் சிறுபான்மை இனப் பெண்கள் நலத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் . "ஹிஜாப்" பிரச்சினையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகளின் கல்வியைப்பற்றியும்
எனது கருத்துக்களை வலியுறுத்தி இன்று மீண்டும் மத்திய சிறுபான்மை இன நல அமைச்சருக்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்