அசாமின் திப்ருகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட இரண்டு நாள் ஆயுஷ் கண்காட்சியில் சித்தா அரங்கு அமைக்கப்பட்டது
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்எஸ்) அறிவியல் அடிப்படையில் சித்தா ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கும், மேற்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்தியாவில் உள்ள ஒரு உச்சபட்ச அமைப்பாகும். சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (CCRS) கீழ், 9 புற நிறுவனங்கள்/அலகுகள், தமிழ்நாட்டில் 3, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, புதுதில்லி, ஆந்திரா மற்றும் கோவாவில் தலா 1 ஆராய்ச்சி மற்றும் பொது மக்களின் தேவைகளுக்கு மருத்துவ சேவை வழங்குவதோடு மருந்தியல் மற்றும் இலக்கிய ஆராய்ச்சி என செயல்படுகின்றன. மேலும், சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் தொடர்ந்து பொது மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின நினைவாக, யோகா மஹோத்சவ் 2023 கவுண்டவுன் நிகழ்ச்சியை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் மொராஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அசாமின் திப்ருகர் நகரில் காலை 6.30 மணிக்கு தொடங்கி 45 நிமிடங்களுக்கு பொதுவான யோகா நெறிமுறையைப் பின்பற்றி வெகுஜன யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 6-7, 2023 அன்று அசாமின் திப்ருகர் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்கள் ஆயுஷ் கண்காட்சி நடத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கு அனைத்து ஆயுஷ் மருந்து முறைகளிலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ முறையும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் சென்னை தேசிய சித்தா நிறுவனம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் பிரதிநிதிகளால் இலவச ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் ஆகியவற்றுக்குக்கான அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அருணாச்சல பிரதேச துணை முதல்வர் திரு. சௌனா மெய்ன், செயலர் ஆயுஷ், வைத்யா ராஜேஷ் கோட்சா மற்றும் MDNIY இன் இயக்குனர் டாக்டர். ஈஸ்வர் வி. பசவரெட்டி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சித்தா தூதுக்குழு மத்திய அமைச்சரைச் சந்தித்து, அஸ்ஸாமின் பொது மக்கள் மற்றும் திப்ருகர் பல்கலைக்கழக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சித்த மருத்துவ முறையின் உற்சாகமான வரவேற்பைப் பற்றி விளக்கியது. அஸ்ஸாம் மக்களிடையே சித்தா சிகிச்சைக்கான கோரிக்கை குறித்து குழு தெரிவித்தது.
கருத்துகள்