சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
இந்தியாவின் தென்பகுதிக்கு ஊக்கமளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதி, அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் போக்குவரத்தை நிறைவு செய்யும் விதத்தில் திறக்கப்பட்டவுள்ளது.
இந்த அதிநவீன முனைய கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல் முருகன், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல திட்டங்கள் மற்றும் இந்திய ரயில்வே திட்டங்களும் நாளை தொடங்கி வைக்கப்படும்.
சென்னை இந்தியாவின் ஒரு முக்கிய பெருநகரமாகும், இது சுமார் 10 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், துடிப்பான கலைகள் மற்றும் இசை, கலை கோயில்கள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு புகழ்பெற்றது, இதனால் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், சென்னை வணிகம் மற்றும் தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மையமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பெருமையை உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பறைசாற்றி வருகிறது. இது மட்டுமின்றி, கலாச்சார ரீதியாக வளமான இந்தப் பெருநகரம், அதன் அமைதியான கடற்கரைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளுடன் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
சென்னை விமான நிலையம், அதன் அதிநவீன முனையங்கள், தடையற்ற பன்மாதிரி இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், தென்னிந்தியாவின் நுழைவாயிலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (பகுதி I) பரபரப்பான விமான நிலையத்திற்கு ஒரு அத்தியாவசியமான மேம்பாடாக அமைந்துள்ளது. தற்போதுள்ள முனையங்களுடன், விமான நிலையம் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்ததும் இது 35 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும்.
இந்த முதல் கட்ட முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய வசதிகளின் அற்புதமான உச்சபட்ச சௌகரியங்களின் அணிவகுப்பைக் கொண்டுள்ளது. 100 செக்-இன் கவுண்டர்கள், 108 குடிவரவு கவுண்டர்கள், 17 மின்தூக்கிகள், 17 நகரும் படிக்கட்டுகள், 06 பயணப்பெட்டிகளைத் திரும்பப் பெறும் பேக்கேஜ் ரீக்ளைம் பெல்ட்கள் மற்றும் பலவற்றுடன் பயணிகளுக்கு முனையத்திற்குள் தடையற்ற வசதிகளும், அனுபவமும் கிடைக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட ஏராளமான வசதிகள், அதன் பயணிகளுக்கு வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவது இந்திய விமான நிலைய ஆணையத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
புதிய முனைய கட்டிடம், நவீன மற்றும் பாரம்பரிய கூறுகளை தன்னகத்தே தடையின்றி ஒருங்கிணைத்திருப்பது, கட்டிடக்கலையின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும். இது உள்ளூர் தமிழ் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பாகும். கோலம், சேலைகள், கோயில்கள் மற்றும் இயற்கை சூழலை முன்னிலைப்படுத்தும் பிற கூறுகள் போன்ற பாரம்பரிய அம்சங்களை இது உள்ளடக்கியது.
விமான நிலைய முனையம் ஒரு எதிர்கால பொறியியல் அற்புதம், நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான அம்சங்களின் கலவையைக் கொண்டுள்ளது. இது பயணத்தை எளிதாக்குவதுடன், கார்பன் தடத்தைக் குறைக்க உதவும். புதிய முனையத்தின் நிலையான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இயற்கை ஒளி தொழில்நுட்ப பயன்பாடு, மழை நீர் சேகரிப்பு நுட்பங்களைச் செயல்படுத்துதல் போன்றவை விமான நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது. இந்தியாவில் ஒரு தேசிய பசுமை கட்டிட மதிப்பீட்டு அமைப்பின் அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது. முனைய கட்டிடம், பிற துணை கட்டிடங்கள் போன்ற சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நகர பக்க உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டமிடப்பட்ட திறன் கூட்டல் மற்றும் விமான பக்க உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு ஆகியவற்றால் மெருகூட்டப்பட்டுள்ளது. விரைவாக வெளியேறும் வழிகள் குறைந்த காத்திருப்பு காலத்துடன் உள்ளேயும் வெளியேயும் விமானங்களின் சீரான இயக்கத்தை மேம்படுத்துகின்றன. உச்சபட்ச நெரிசல் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 36 இயக்கங்களிலிருந்து 45 இயக்கங்களாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்படும்.
சென்னை விமான நிலையத்தில் 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம், இரண்டு கட்டங்களாக ரூ. 2467 கோடி செலவில் கட்டப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
https://we.tl/t-QafElsHkvI
கருத்துகள்