கேந்திரிய வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைப்பு,
முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட
957 நபர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் இல்லை என்ற நிலையில் கேந்திரிய வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தகவல்.
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 784 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை என்ற பிரச்சினையை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பலரும் எழுப்பி இருந்த நிலையில்
ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் (CAT) நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது
அதனால் கேந்திரிய வித்யாலயாவில் நடக்கவிருந்த சமூக அநீதி தடுக்கப்பட்டது.
இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அமைச்சருக்கு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதமும் எழுதியிருந்தார்.அதில்
கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 மற்றும் 173 நபர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி. அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது.
தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை. "மெரிட்" எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி என்ற இட ஒதுக்கீட்டு விவரங்களும் இல்லை. "மெரிட்" மூலமாக வரக் கூடிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது. பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமுகத்தில் உள்ளது துரதிஷ்டமானாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டு வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட பழங்குடிப் பிரிவினர் 58 நபரில் 28 "மீனா"க்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் (UR) தேர்வர்களில் ஒரு "மீனா" கூட இல்லை. இது அப்பட்டமாகத் தெரிகிற ஒரு உதாரணமாகும். வெளிப்படையான பட்டியலாக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தெரிவிக்க வேண்டும்.
ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதித் தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.
தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும். என இது குறித்து மத்தி கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்
ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் (CAT) நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது
கருத்துகள்