2023 ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
2023 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல் "இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நிதியமைச்சகத்தின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில், வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜிஎஸ்டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது." எனதய தெரிவித்துள்ளார்
இதில் இவ்வளவு வரிகள் வாங்கியது மக்களை பாதிக்கும் என்பது தான் உண்மை அவரது கருத்து அதுவானாலும் வரி குறித்த ஒரு இலக்கியப் பார்வை “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (பாடல்-183) என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது. அரசனுக்கு செவியறிவுறுவாக எண்ணற்ற பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் குடிமக்களிடம் நிறைய வரி வசூலிக்கின்றான் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகின்றார். ‘அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும் வயல்' என்பது வயல் நிறைய நிறைந்துள்ள நெல்மணிகளை யானைகள் கூட்டாய் சென்று அழிப்பதைப்போல வரி என்ற யானையை அவிழ்த்துவிட்டால் நாட்டுமக்கள் நிம்மதியிழப்பார்கள் என்ற கருத்தை பாண்டியன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் பாடுகின்றார். மக்களது வாழ்வு சிறக்க அதிக வரிச்சுமையற்ற நாடு தேவைப்படுகின்றது. அதிக வரி விதிக்காமல் நாட்டை ஆள்வதே மக்களைத் துன்புறுத்தாத அறவழியாகும். தற்போது வெளிநாடுகள் சிலவற்றில் வரிச்சுமை மக்களுக்கு இல்லை அதாவது செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் என்ற இரட்டை தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இதற்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இதன் முதன்மை வருவாய் சுற்றுலா ஆகும். வெளிநாட்டவர்களுக்கு பொருளாதாரக் குடியுரிமையும் வழங்குகிறார்கள்.
இந்தப் பட்டியலில் பெர்முடா, ஓமன், குவைத் மற்றும் வனுவாடு ஆகியவையும் அடங்கும். இந்த நாடுகளெல்லாம் மிகவும் மகிழ்ச்சியானவை. மேலும், வரியற்றவை. என்பதே வரி அதிகரிப்பால் மக்கள் துன்பப்படும் நிலை தான் இங்கு காண்கிறோம் .
கருத்துகள்