பொன்னமராவதி. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் ஒரு தனி நாடு. பொன்னன் அமரன் ஆண்ட மிகச் சிறந்த அரசர்களில் பேராலேயே ‘பொன்னமராவதி’ என பெயர்
வந்தது ,அமரன் காலத்தில் கோட்டை தளபதியாக இருந்த அழகாண்டத்தேவர் சிறப்புடன் செயலாற்றியவர். பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொன்னமராவதி தனது எல்லையில் சோழநாட்டு எல்கையில் அமைந்த சிற்றரசாக இருந்ததால் அதைக் கவர மூன்றாம் இராஜராஜன் பாண்டிய நாட்டில் தொடுத்த
போரிலே அழகாண்டத்தேவர் ஆற்றிய சிறந்த பணியையும், காட்டிய வீரத்தையும் கண்டு மகிழ்ந்த அரசர் பொன்னன், அவருக்கு ஆயுதங்கள் கொடுத்துச் சிறப்பித்து சேர்வை பட்டமுமளித்தார். இச் சமயத்தில், புற்றீசலெனப் பாய்ந்து வந்த எதிரிப் படைகளை தடுத்து நிறுத்தி வெஞ்சமர் செய்த தளபதி அழகாண்டத் தேவர், போரில் உயிர் நீத்தார்.
அவர் கடுஞ்சமர் புரிந்து உயிர் நீத்த இடமே அருள்மிகு பட்டமரத்தான் ஆலயமுள்ள இடம். தளபதி அழகாண்டத்தேவர் உயிர் நீத்த இடத்தில் அவரது சிறந்த வீரத்தைப் பாராட்டி கொன்றை மரம் நடப்பட்டது. அம்மரமே அழகாண்டத்தேவரின் ஆன்மா சொரூபமாகி பட்டமரத்தான் என விளங்குகிறது. இப்போது அம்மரத்தின் அடிப்பாகம் கவசமிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தெய்வீக சக்திகளைக் கொண்ட அருட் கடலான பட்டமரத்தான் சுவாமி இப்பகுதி மக்களுக்கு கலியுகக் கடவுளாக விளங்குகிறார்.
பொன்னன் அமரன் பெயரில் பொன்னமராவதியை நிர்மானித்த சிற்றரசன் எனக்கூறும் அதேசமயம், பொன்னன், அமரன் என்ற இரு அரசர்களின் இவ்வரசர்கள் நெடிராஜபாண்டியராலும், நாயக்க மன்னர்களாலும் தோற்கடிக்கப்பட்டனர் எனவும் இவ்வூர் அழகிய நாச்சியம்மன் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரிலுள்ள வைணவக் கோயிலுக்கு 1527-ஆம் ஆண்டில் பொன்னம்பல நாதத் தொண்டை மான் வீரநரசிங்கராயர் பெயரால் நிலங்களை வழங்கியுள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் பொன்னமராவதி மருங்காபுரி ஜமீன் சிற்றரசர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் அது இராமநாதபுரம் சேதுபதிகளின் கைக்கு மாறியது. பிறகு புதுக்கோட்டை விஜரகுநாதனாகிய தனது மைத்துனருக்கு இரமநாதபுரம் இரகுநாத கிழவன் சேதுபதியால் விஜய ரகுநாதத் தொண்டைமானுக்கு வந்தது
கடந்த
12-ஆம் நூற்றாண்டில் இங்கு பாண்டியர்-சிங்களவர் போரும் நடைபெற்றது. அமரன் பெயரால் அமைந்த ‘அமர கண்டான் ஊருணியும் இங்குள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப் பெற்றது. பைரவர் சந்நதியின் எதிரே சூரிய பகவான், குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கிறார்.
போரில் இறந்த பொன்னனுக்காக நிறுவப்பட்ட நடுக்கல்லில் பொன்னமராவதி கோட்டையின் நான்கு வாயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. கிழக்கு வாயில் -யாழி; 2. மேற்கு வாயில் -கோட்டைப் பிள்ளையார்; 3. வடக்கு வாயில் -வலையபட்டி மலையாண்டி சுவாமி; 4.தெற்கு வாயில் -அழகிய நாச்சியம்மன் கோயில். நடுக்கல் என்பது வரலாற்று சிறப்புமிக்க வீரர்களுக்கு வீர வணக்கம் செய்யும் தமிழர் மரபினை வெளிக் காட்டும் சின்னமாகத் திகழ்கிறது. கோட்டைப் பிள்ளையார் கோயில் புதுப்பிக்கப்படாமல், பழைய நிலை யிலேயே உள்ளது.
பொன்னன் அமரனுக்கும் பாண்டிய ருக்குமிடையே நடைபெற்ற போரில் பாண்டியன் வென்றவுடன், பொன்னன் அமரனைப் பார்த்து பொன்னமராவதியின் கருவூலத்தைக் கேட்டான். அமரன், 10 ஏக்கர் பரப்புள்ள ஒரு நிலத்தைக் காட்டி ‘இந்தப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் பொக்கிஷம் உள்ளது’ என்றான். இதனை ஆழமாக வெட்டினால், அதாவது, குழிக்குள்ளிருந்து பார்க்கும்போது பறம்புமலை (பிரான்மலை) கண்ணுக்குத் தெரியாமல் மறையும் அளவுக்குத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்றும் சொன்னான்.
பாண்டிய வீரர்கள் 10 ஏக்கர் நிலத்தையும் வெட்டி மண்ணைப் பக்கத்தே மலையெனக் குவித்தனர். இறுதி வரை கருவூலம் கண்ணில் படவேயில்லை. ஆனால், பெருமழை பெய்ததும் பள்ளம் நிரம்பி ஓர் அழகான ஊருணி உருவாயிற்று. ‘‘கோள் சொல்லிக் குளம் வெட்டிய குற்றத்திற்காக’ அமரன் பாண்டியர்களால் வெட்டப்பட்டான். அதுவே அமரகண்டான் ஊருணி அதன்பின் பாண்டியர்களின் எல்லை நகராயிற்று பொன்னமராவதி.வழியாக
கோவலன் -கண்ணகி இருவரும் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பொன்னமராவதியிலுள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயத்தில் தங்கிச் சென்றதாக இங்கு பாடப்படும் பழம் பாடல்கள் கூறுகின்றன. வரலாற்றில் சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் இணைத்த சாலை அக்காலத்தில் பொன்னமராவதி வழி சென்று, பறம்பு மலையை (பிரான்மலை) சுற்றிச் சென்றது. அதனால்தான் சோழ -பாண்டிய எல்லைப் போர்கள் பெரும்பாலும் பொன்னமராவதி பகுதியிலேயே நடந்தன என்பதை அறிகிறோம். இந்த வரலாற்றில் அறியப்படும் பட்டமரத்தான் ஆலயம் இந்தாண்டில் 63 வருடமாக ஊர் மக்கள் நடத்தும் பூச் சொரிதல் விழா சிறப்பாக நடந்தது.
கருத்துகள்