ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E 609 மூலம் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவரை 06.05.2023 அன்று மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் உள்ளாடைகளில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த ரூ.37.05 லட்சம் மதிப்புள்ள 702 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம், சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
பயணிகளின் விவரக்குறிப்பின் அடிப்படையில், 07.05.2023 அன்று ஏர் இந்தியா விமான எண் AI-906-ல் துபாயிலிருந்து வந்த ஒரு பெண் பயணியை சென்னை ஏர் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டபோது, உள்ளாடையில் ரப்பர் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பிரித்தெடுத்தபோது, ரூ.44.96 லட்சம் மதிப்புள்ள 852 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்கம் மீட்கப்பட்டு, சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம், ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டு, சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே.போஜெயகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்
1.21 கோடி மதிப்புள்ள 2.304 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
ரகசிய புலனாய்வு தகவல் அடிப்படையில், 08.05.2023 அன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை மூலம் கொழும்பில் இருந்து வந்த மூன்று பயணிகளை சென்னை விமான சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். அவர்களது உடமைகளைப் பரிசோதித்ததில், அதில் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்படிருந்த பாக்கெட்டுகளில் முறையே 945 கிராம், 685 கிராம் மற்றும் 674 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்கம் கிடைத்தது. மொத்தம், 1.21 கோடி மதிப்புள்ள 2304 கிராம் எடையுள்ள அந்த தங்கம் மீட்கப்பட்டது. சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் அது பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே.போஜெயகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்