சங்ககாலம் பாரி ஆண்ட பரம்புமலை சாரந்த முன்நூறு ஊர்களில் முதலூர் சிங்கம்புணரி 1700 ல் இரமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம்
பின் மகள் சிவகங்கை முதல் இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு மன்னர் கிழவன் இரகுநாத சேதுபதி வழங்கிய 108 கோவில் கொடை அப்போது மதுரை ஜில்லா அமராவதி தாலுகா பின் இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூர் தாலுகா பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தற்போது இராணி டி எஸ். கே .மதுராந்தகி நாட்சியார் ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிங்கம்புணரி பெருங்கிராம மக்களின் காவல் தெய்வம் பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்கையான கேரள சிங்கவளநாடாக விளங்கிய பாண்டியநாட்டின் வால் பகுதி தான் எல்லை காவல் தெய்வம் பிடாரி அம்மன் ஆட்சி செய்யும் சிங்கம்புணரியில் அமைந்துள்ள கோவிலில் சைவமும், வைணவமும் கலந்த கையனார் எனும் அய்யனார் சிறப்பு பொன்னமராவதி பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்குப் பின்னர் பொது ஆண்டு 13-ஆம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு வரலாறு தெரிவிக்கிறது.16 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள கோவிலில் சிங்கம் மீதமர்ந்த பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகன், மேலும் நவக்கிரக்கங்களுக்குத் தனிக் கருவறைகளும், தனி விமானங்களும் கோவிலில் அமைந்துள்ளது,
கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் ஆண்டு தோரும் சிறப்பாக நடக்கும் விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் கழுவன் திருவிழாவும், 9-ஆம் நாள் தேர்த்திருவிழாவும், 10-ஆம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவில் சுற்று வட்டாரப் பகுதி கிராம மக்கள் வந்து சேர்ந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனி. குறிப்பாக தேர் நிலையடைந்ததும் இப்பகுதி மக்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடிப் படிக்கட்டுகளில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மக்கள் காலகாலமாக இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டில் விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள். ஐந்து நிலை நாடு சார்ந்த
முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம் இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராஜன், சேவுகன், சேதுபதி என பல திருநாமங்களில் போற்றப்படுகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் பெயர் கொண்ட போதிலும் சைவக் கடவுளாகவே போற்றப்படுகிறார்
கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதலாவது சிங்கம்புணரி மாடு தான் மாரியாதை பெற்று அவிழ்க்கப்படும் பழக்கம் இன்றும் உண்டு இவ்வாறு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்தப் பகுதியில் உள்ள வீதிகளில் சுதந்திரமாகச் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உள்ளிட உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். மதுரை பாண்டிய நாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் இந்தக் கோவில் காளைகளுக்குத்தான் முதல் மரியாதை செலுத்தப்படுவது பழங்காலம் தொட்டு இன்று வரை வழக்கத்திலிருந்து வருகிறது.
நேர்த்திக்கடனாக விடப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். வைகாசி விசாகச் திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் பத்து நாட்கள் தங்கியிருப்பார்.
அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்பாக நெய்வேத்தியம் விநாயகருக்குப் படைக்கப்படும். பத்து நாட்களுக்குப் பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்தக் கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பத்து நாட்களும் அவருடன் அருள்மிகு சேவுகபெருமாள் அய்யனார் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் உண்டு.
மற்ற நாட்களில் இந்தக் கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தி அய்யனாரை மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாகக் கூடி முடிவுகளை எடுக்குமிடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் அய்யனார் முன்னிலையில் தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு பைசல் செய்யப்படும். அப்போது தான் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்புப் பெற்ற கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்கக் கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
கோவிலில் வெள்ளித் தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளித் தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலிலுள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளித் தகடு பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராம.அருணகிரியின் முயற்சியால் கோவிலிலுள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் இராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்றது.
கருத்துகள்