முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் 22 வருடத்திற்குப் பின் சிறப்பாக நடந்தது

சங்ககாலம் பாரி ஆண்ட பரம்புமலை சாரந்த முன்நூறு ஊர்களில் முதலூர் சிங்கம்புணரி 1700 ல் இரமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம்




பின் மகள் சிவகங்கை முதல் இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு மன்னர் கிழவன் இரகுநாத சேதுபதி வழங்கிய 108 கோவில் கொடை அப்போது மதுரை ஜில்லா அமராவதி தாலுகா பின் இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூர் தாலுகா பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தற்போது இராணி டி எஸ். கே .மதுராந்தகி நாட்சியார் ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிங்கம்புணரி பெருங்கிராம மக்களின் காவல் தெய்வம் பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்கையான கேரள சிங்கவளநாடாக  விளங்கிய பாண்டியநாட்டின் வால் பகுதி தான்  எல்லை காவல் தெய்வம் பிடாரி அம்மன் ஆட்சி செய்யும் சிங்கம்புணரியில் அமைந்துள்ள கோவிலில் சைவமும், வைணவமும் கலந்த கையனார் எனும் அய்யனார் சிறப்பு  பொன்னமராவதி பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்குப் பின்னர் பொது ஆண்டு 13-ஆம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு  வரலாறு தெரிவிக்கிறது.16 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள கோவிலில் சிங்கம் மீதமர்ந்த பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகன், மேலும் நவக்கிரக்கங்களுக்குத் தனிக் கருவறைகளும், தனி விமானங்களும் கோவிலில் அமைந்துள்ளது,

கோவிலில் கடந்த வாரம்  கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் ஆண்டு தோரும் சிறப்பாக நடக்கும் விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் கழுவன் திருவிழாவும், 9-ஆம் நாள் தேர்த்திருவிழாவும், 10-ஆம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெறுகிறது.

 தேர்த்திருவிழாவில் சுற்று வட்டாரப் பகுதி கிராம மக்கள் வந்து சேர்ந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனி. குறிப்பாக தேர் நிலையடைந்ததும்  இப்பகுதி மக்கள்  லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடிப் படிக்கட்டுகளில் உடைத்து  நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மக்கள் காலகாலமாக இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டில் விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள்.  ஐந்து நிலை நாடு சார்ந்த 

முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம் இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராஜன், சேவுகன், சேதுபதி என பல திருநாமங்களில் போற்றப்படுகிறார். அரிஹர புத்திரராக விளங்கும்  சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள்  பெயர் கொண்ட போதிலும் சைவக் கடவுளாகவே போற்றப்படுகிறார்

கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதலாவது சிங்கம்புணரி மாடு தான் மாரியாதை பெற்று அவிழ்க்கப்படும் பழக்கம் இன்றும் உண்டு இவ்வாறு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்தப் பகுதியில் உள்ள வீதிகளில் சுதந்திரமாகச் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உள்ளிட உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். மதுரை பாண்டிய நாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடக்கும்  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் இந்தக் கோவில் காளைகளுக்குத்தான் முதல் மரியாதை செலுத்தப்படுவது பழங்காலம் தொட்டு இன்று வரை வழக்கத்திலிருந்து வருகிறது.

நேர்த்திக்கடனாக விடப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார்.  வைகாசி விசாகச் திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் பத்து நாட்கள் தங்கியிருப்பார்.

அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்பாக நெய்வேத்தியம்  விநாயகருக்குப்  படைக்கப்படும். பத்து  நாட்களுக்குப் பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்தக் கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பத்து நாட்களும் அவருடன் அருள்மிகு சேவுகபெருமாள் அய்யனார் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் உண்டு.

மற்ற நாட்களில் இந்தக் கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தி அய்யனாரை  மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாகக் கூடி  முடிவுகளை எடுக்குமிடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் அய்யனார் முன்னிலையில் தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு பைசல்  செய்யப்படும். அப்போது தான் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்புப் பெற்ற கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்கக் கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

கோவிலில் வெள்ளித் தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளித் தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலிலுள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளித் தகடு பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராம.அருணகிரியின் முயற்சியால் கோவிலிலுள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. கடந்த  இரண்டாண்டுகளாக கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் சமீபத்தில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் கோவிலில்  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை  அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் இராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...