இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும் ஐ.பி.எல். தற்போது அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு கடிவாளம் போடாவிட்டால் இந்தச் சூதாட்டத்தால் நாடு மேலும் கலாச்சாரப் பாரம்பரியக் கேடாக மாறும்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிரபார்ப்பாகும்
ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாகக் கிடைக்கும் டெலி காஸ்ட் ரைட்ஸ் உட்பட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வேண்டும்.
அதில் நடக்கும் பகல் கொள்ளையை ஊக்குவிக்கிறதென்ற கவலை எதிரகாலத் தலைமுறை மீது ஆர்வம் கொண்டவர்களின் கவலை அதுவே ஒரு பகுதி மக்களுக்கு சாரயத்தால் பாதிப்பு மறுபகுதி மக்கள் தொலைக்காட்சித் தொடருக்கு அடிமை, இப்போது இளைஞர்கள் தரப்பில் இந்த ஐபிஎல் தற்போது ஆட்டிப் படைக்கிறது இந்தக் கூத்தையெல்லாம் என்னவென்று சொல்வது? என்பது அப்பாவி மக்களின் கவலை.
ஐபிஎல் அணி என்பது என்பது ஒரு தனியார் கிரிக்கெட் நிறுவனம் அல்லது கிளப்.
அந்தக் கிளப்பின் சட்டையை அணிந்து கொண்டு தான் விளையாட்டுத் துறை அமைச்சர் இருக்க அப்போது இளைஞர்கள் நிலை
அந்தச் சட்டையில் S N J 10,000 என்ற விளம்பரம் வேறு. அது என்ன சர்பத் விற்கும் கம்பெனியா?
இல்லை தானே!
அரசியல்வாதி வேறு, அரசியல் சாசன சட்ட கடமையை நிறைவேற்றும் ஆட்சியாளர் என்பது வேறு. ஆட்சியாளர் அனைவருக்கும் பொதுவானவர்.
உதாரணத்திற்கு இரு மாநிலங்களுக்கு இடையே அரசின் அதிகாரபூர்வ விளையாட்டு அணிகள் மோதுகிறதென்று அதனை ஒரு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் எடுத்துக் கொள்வோம்
இரு அணி வீரர்களையும் சமமாக மதித்து திறமையாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவாரே தவிர ஒரு சார்பு நிலை எடுத்து தனது மாநில அணி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே மாட்டார்.
எந்த அணி வெற்றி பெற்றாலும் பொதுவெளியில் வாழ்த்துவார் பாராட்டுவார். தோல்வியுற்ற அணி மனம் நோகும் படி ஒரு வார்த்தை கூட பிரயோகிக்க மாட்டார்..
ஆனால் இங்கு இப்போது
சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மே மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே மாதம் 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய நிலை ஆனால் டிக்கெட்டுகள் வாங்கி பலர் பிளாக்கில் விற்பது ஜோரஸக நடந்தது ஆம் அதுவும் ஒரு சூதாட்டம் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.
இந்தியாவின் தேசிய வியாதி ஐ.பி.எல். தற்போது அதற்கு பாஜக அரசு கடிவாளம் போடவில்லை என்றால் இந்த சூதாட்டத்தால் நாட்டில் தீமையாக மாறும்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாக கிடைக்கும் டெலிகாஸ்ட் ரைட்ஸ் உள்ளிட்ட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும்.
இதை அரசு செய்யவில்லை என்றால் நடக்கும் பகல் கொள்ளையை ஆட்சி ஊக்குவிக்கிறது என்றே அர்த்தம்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைப் பார்த்துச் செய்த அருவருப்பான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்பட்டம்வென்றது. இறுதியில் 6 பந்துக்கு 13 ரன்கள் தேவை எனும் சூழ்நிலையில் மோஹித் சர்மா முதல் 4 பந்தை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை எனும் நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5 வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கிப் பறக்கவிட்டார். தொடர்ந்து கடைசிபந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்தப் பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 வது முறையாக சென்னை ஜாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது.
இதனிடையே இறுதி ஓவரின் முதல் 4 பந்தை மோஹித் சர்மா சிறப்பாக வீசிய நிலையில், அணியில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டதனால் குஜராத் அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ-யின் செயலாளருமானஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைபார்த்துஅருவருப்பானசெய்கைசெய்ததுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர், நாட்டில் பலருக்கும் திண்பதுக்குச் சோறிருக்காது,
குடிப்பதற்க்குக் கூட நல்ல தண்ணீர் இருக்காது
சுவாசிக்கவும் சுத்தமான காற்றிருக்காது
நாம் பத்தாண்டுக்கு முன் பாத்து ரசித்த மலை இருக்காது,
துள்ளிக் குதித்த ஆற்றில் மண் இருக்காது
நாம் ஓடி விளையாடிய நிலமிருக்காது
இருந்தும் கேட்பான் கிரிக்கெட் ஸ்கோர் எவ்வளவு ? அவன் யார்? இந்த சூதாட்ட்தால் ஆர்வம் தூண்டப்பட்ட இளைஞன் நம் கலாச்சாரம் பன்பாடு மறந்த கிரிக்கெட் சூதாட்ட ரசிகன் ...கிரிக்கெட்டில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோல்வியடைய வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த சூதாட்டத்தின் மையப்புள்ளிதான் . மேலும் பல்லாயிரம் கோடி சூதில் வரும் வருவாய் அவர்களை மகிழ்விக்க சில நூறு கோடிகள் மட்டுமே ஜெயிக்கும் தோற்கும் இங்கு வெல்வதும் தோற்பதும் வீரர்கள் அல்ல வீரர்களாக பார்க்கப்படும் வியாபாரக் குதிரைகள் அவர்கள் வருவாய் கௌரவம் அல்ல..கிரிக்கெட் சாமானியன் பொழுது போக்கு வர்த்தகர்கள் நடத்தும் வியாபாரம். லகான் அவர்கள் கையில் தான்
கருத்துகள்