மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, பிரிகேடியர் அமிதா தேவ்ராணி சகோதரிகளுக்கு ராணுவ மருத்துவ சேவைக்கான தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்
முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ராணுவத்தில் சிறப்பாக செவிலியர் சேவையை மேற்கொண்டமைக்காக மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, பிரிகேடியர் அமிதா தேவ்ராணி சகோதரிகளுக்கு முறையே 2022 மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விருதுகள் புதுதில்லியில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
ராணுவ செவிலியர் சேவைப் பிரிவின் கூடுதல் இயக்குநரான, மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, தெற்கு மண்டல ராணுவ செவிலியர் சேவைப்பிரிவின் பிரிகேடியர் அமிதா தேவ்ராணி ஆகியோரின் சுமார் 40 ஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ சேவையை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தின் கோட்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விரு சகோதரிகளும் ராணுவத்தினருக்கான மருத்துவமனைகள், செவிலியர் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்
கருத்துகள்