எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023 அன்று எகிப்து அமைச்சரவையில் உள்ள இந்தியப் பிரிவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு (2023) குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த இந்தியப் பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரிவு எகிப்து பிரதமர் திரு முஸ்தபா மத்பவுலி தலைமையில் பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது
எகிப்து பிரதமர் மத்பவுலியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியப் பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய துறைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தியப் பிரதிகளிடமிருந்து நேர்மறையான கருத்துகள் வருவதை அவர்கள் பாராட்டினர். மேலும் பல துறைகளில் இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முழுமையான அரசு ரீதியிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார். மேலும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் எகிப்துடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளங்கள், மருந்து, மக்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எகிப்து பிரதமர் மத்பவுலி மற்றும் ஏழு எகிப்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்:
எகிப்து மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் டாக்டர் முகமது ஷேக்கர் எல்-மர்காபி
எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சாமே ஷௌக்ரி
எகிப்து திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் திரு ஹாலா அல்-சயீத்
எகிப்து சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் ரனியா அல்-மஷாத்
எகிப்து நிதி அமைச்சர் டாக்டர் முகமது மாயித்
எகிப்து தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் அம்ர் தலாத்
எகிப்து தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு அகமது சமீர் ஆவர்.எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.
அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.
மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்எகிப்து நாட்டின் கிராண்ட் முஃப்தியுடன் (மூத்த மதத் தலைவர்) பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு அரசு முறைப் பயணத்தின் போது எகிப்தின் கிராண்ட் முஃப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.
கிராண்ட் முஃப்தி தமது சமீபத்திய இந்தியப் பயண அனுபவத்தைப் பிரதமரிடம் அன்புடன் நினைவுகூர்ந்தார், மேலும் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளையும் அவர் எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் கிராண்ட் முஃப்தி பாராட்டினார்.
சமூக மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
எகிப்தின் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் தார்-அல்-இஃப்தாவில் தகவல் தொழில்நுட்ப உயர் திறன் மையத்தை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய வல்லுநருமான திரு. தாரெக் ஹெக்கியுடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான திரு. தாரெக் ஹெக்கி சந்தித்தார்.
உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் இரண்டு முக்கிய இளம் யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் சந்தித்தனர்
யோகாவின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை ஊக்குவித்தார். எகிப்தில் மக்களிடம் உள்ள யோகா மீதான மிகப் பெரிய ஆர்வத்தை அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது
கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.
எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்.பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது
கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.
எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்
கருத்துகள்