தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் வாஷிங்டன் டி.சி-யில் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.
மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாதரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ரா உடன் பிரதமர் சந்திப்பு
மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 21, 2023 அன்று வாஷிங்டன் டி.சி-யில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்குமாறு மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குறைக்கடத்தி விநியோக சங்கிலியின் பல்வேறு பிரிவுகளில், போட்டித்தன்மை வாய்ந்த நன்மைகளை இந்தியாவால் வழங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியருடன் பிரதமர் சந்திப்பு
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஜி.இ. நிறுவனத்தின் நீண்டகால உறுதிபாட்டை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு உயர்தர தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு பற்றி பிரதமரும், திரு கல்ப் ஜூனியரும் விவாதித்தார்கள்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகப்பெரிய அளவில் பங்கேற்குமாறு ஜி.இ நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு காரி ஈ. டிக்கர்சன் உடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி-யில் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
திரு காரி ஈ. டிக்கர்சனை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் குறைக்கடத்தி சூழலியலை வலுப்படுத்துவதில் பங்களிப்பை வழங்குமாறு அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் செயல்முறை தொழில்நுட்பம் மற்றும் உயர்தர பேக்கேஜிங் திறன்களை மேம்படுத்துவதற்கும் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்காக இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுவதன் சாத்திய கூறுகள் குறித்தும் பிரதமரும், திரு டிக்கர்சனும் ஆலோசனை நடத்தினார்கள்.
கருத்துகள்