அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த நடத்துனரருக்கு ரூபாய்.பத்தாயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கு ரூபாய்.பத்தாயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.-
நாமக்கல் சுப்பராயன் (வயது 70). கடந்தாண்டு பரமத்திவேலூரிலிருந்து நாமக்கல்லுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பேருந்து எல்.எஸ்.எஸ். எனக் கூறி நடத்துனர் செங்கோடன் ரூபாய்.17 க்கு பயணச்சீட்டுக் கட்டணம் வசூல் செய்தார். அது மற்ற பேருந்துக்கும் இந்தப் பேருந்துக்கும் ரூபாய் ஒன்று வித்தியாசம் இருந்தது ஆனால் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபடி பேருந்து சென்றதையடுத்து சுப்பராயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் சேலம் ஆகியவற்றில் கேள்வி எழுப்பியதில் அந்தப்பேருந்துக்கு எல்.எஸ்.எஸ். உரிமம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது அதனால் கூடுத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக சுப்பராயன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கோட்டையன் மற்றும் உறுப்பினர்கள் செல்வி, செல்வநாதன் ஆகியோர் கூடுதல் கட்டணம் வசூல் செய்த நடத்துனர் செங்கோடன், சேலம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆகியோர் கூடுதலாக வசூல் செய்த தொகை ரூபாய்.1-ஐ பயணிக்குத் திருப்பி வழங்கவும், சேவைக் குறைபாட்டிற்கு அபராதமாக ரூபாய்.பத்தாயிரம் நுகர்வோர் சேமநல நிதிக்கு வழங்கவும், வழக்கு செலவாக ரூபாய்.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.
இதேபோல நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் சுதர்சன் பெயரில் தனியார் வங்கியில் மறு முதலீட்டுத் திட்டத்தில் ரூ.ஐந்தாயிரம் முதலீடு செய்து, முதிர்வு தொகையாக ரூபாய்.45 ஆயிரத்து 833 பெறும் வகையில் வங்கிச் சான்றிதழ் சீட்டுப் பெற்றிருந்தார்.
இதற்கிடையே இந்த வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்பட்டதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி முதிர்வு தொகையை திருப்பி தர நடராஜன் கோரியபோது, வங்கி சார்பில் சீட்டிலுள்ள தொகையில் பாதியை மட்டுமே தர முடியும் என கூறப்பட்டது.
இது குறித்து நடராஜன் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தில் புகார் செய்தார். சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள் முதிர்வு தொகையான ரூபாய்.45 ஆயிரத்து 833 மற்றும் இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதில் பொது நீதி யாதெனில் தற்போது அரசுப் பேருந்தில் 1டூ1 மற்றும் 123 ஆகிய பேருந்துகள் இதேபோல. பயணிக்கும் மக்களை ஏமாற்றித்தான் கட்டணம் வசூல் செய்யும் நிலையில் பாதிக்கப்படும் ஒவ்வொரு பயனரும் சுப்புராயன் போல வழக்குக்குச் சென்றால் பேருந்துக் கட்டண ஊழலை ஒழிக்க முடியும் என்பதே இதில் பொதுநீதி
கருத்துகள்