திண்டுக்கல் மாவட்டம் பழனியில், விற்பனைக்காக கிளி, குருவிகளை பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதிப்பு.
பழனி வனப்பகுதியிலுள்ள விலங்குகள், பறவைகளைப் பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாக்கப்பட்ட பறவை இனங்களான கிளி, முனியாஸ் குருவிகள், 'ரெட் மியாஸ்' குருவிகளை வீடு, தோட்டங்களில் வளர்க்கப்படுவதை தடுக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில் பழனி வட்டம் கோதமங்கலம் பகுதியில் கிளி, 'ரெட் மியாஸ்' குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பழனி வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை யடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின் படி, பழனி வனச்சரக அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோதமங்கலம் அடுத்த பெரும்பாறைப் பகுதியில் சோதனை செய்த போது ஒரு வீட்டில் கிளிகள், 'ரெட் மியாஸ்' குருவிகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் கிளிகளைப் பிடிக்கப் பயன்படுத்திய வலையுமிருந்தது. அதையடுத்து வீட்டில் இருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பழனி ஆவணி மூலவீதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு (வயது 50), அவர் மனைவி பார்வதி (வயது 40) இவர்கள் தோட்டப் பகுதியில் வலையை விரித்து இறை போட்டு கிளி, 'ரெட் மியாஸ்' குருவிகளைப் பிடித்து பெரும்பாறை பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரியவந்ததைத்தொடர்ந்து வீட்டிலிருந்த 40 பச்சை கிளிகள், 70 ரெட் மியாஸ் குருவிகள், வலை, கூண்டுகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்த. பின்னர் வன அலுவலர் உத்தரவுப்படி மாரிக்கண்ணு, பார்வதி தம்பதிக்கு ரூபாய். முப்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பறிமுதல் செய்த கிளிகள், ரெட் மியாஸ் பறவைகளை பழனி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வெளியில் திறந்து விட்டனர்.இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் தெரிவித்த போது , கிளி போன்ற சில பறவைகளை வீட்டில் வளர்க்கத் தற்போது தடை உள்ளது. எனவே கிளி, ரெட்மியாஸ், முனியாஸ் வகைப் பறவைகளை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது. அவ்வாறு மீறி வாங்கி வீட்டில் வளர்த்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்