தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் மாதம் .10 ஆம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான புதிய 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் தாலுகாவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாள்
ஜூன் 10 அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்துக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு அதன் விழா சிறப்பாக நடக்கும் நிலை பாகனேரி நாடென்பது 22 1/2 சிற்றூர்கள் உட்பட்டுள்ள ஒரு சிவகங்கை சமஸ்தானத்தின் பகுதியாகும்.
இந்த நாட்டின் அப்போது சம்பளம் ,உம்பளம் அம்பலம் என்ற பொறுப்பும் உண்டு வாளுக்குவேலி அம்பலமாவார். இவருடைய தங்கை கல்யாணி நாச்சியார் தம்பி கறுத்ததாப்பன் அம்பலமார்கள்.
மாவீரர்கள் மருது பாண்டியர்களின் உற்ற நண்பரான வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் மருது சகோதரர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மக்கள் படை திரட்டி வெள்ளையர்களுக்கெதிராக நடந்த போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவியவர் மேலும் அந்த எதிர்ப்பு காரணமாக கத்தாளம்பட்டில் வெள்ளைக்கரார்களின் சதியால் புதைகுழி வீழ்ந்த மாவீரன்
இராணி வேலு நாச்சியார் மற்றும் தளபதி பிரதானி மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151 ல் குறிப்பிடப்படுகிறது.
அக்டோபர் 24 ,1801ஆம் ஆண்டில் திருப்புத்தூர் வரும் சொக்கநாதபுரம் கத்தப்பட்டில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் அவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வந்ததில் வாளுக்குவேலி அம்பலம் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.இவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் ஜூன் 10 ஆம் (வைகாசி 27) தேதி, பாகனேரி நாட்டு மக்களால் பொங்கல் வைத்துப் படையலிட்டு, வீர வணக்க நினைவு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். முன்னால் முதல்வர்
கலைஞர் மு.கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் புதினம் மூலம் தற்போது முன் வரலாறு தெறியாத பலரால் அறியப்படும்
இவரது வீரத்தினைப் போற்றும் விதமாக அரசு விழா நடத்த வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது வாளுக்குவேலி அம்பலம் தமிழ்நாட்டில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலம் என்று அறியப்படுகிறது
ஆனால் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையிடம் இவரைப் பற்றிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கும் , இவர் வாழ்ந்ததற்கு எந்த ஆவணமும் ஆவணப் படுத்தப்படவில்லை என்கிறார்கள்
சரித்திரக்கும்மி மற்றும் அம்மாணை உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல் போன்ற ஏதேனும் ஆவணம் இருக்கிறதா என்றும் அறியமுடியவில்லைவாளுக்கு வேலி" அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றை எஸ். எஸ். தென்னரசு, 1975 ஆம் ஆண்டு செம்மாதுளை என்ற நூலில் வெளியிடப்பட்டது.
அதை அடிப்படையாகக் கொண்டு கலைஞர் மு. கருணாநிதியால் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் தென்பாண்டிச் சிங்கமாகும். புதினம் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானதில் நடிகர் நாசர் நடித்த தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.
இச் சூழ்நிலையில் சுதந்திரப்போராட்டத் தியாகி வாளுக்கு வேலி அம்பலம் அஞ்சல் தலை வெளியிடக் கோரிக்கை வைக்கும் மக்கள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்பட 25 தலைவர்களின் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப் பட்டுள்ளது.
மௌரியப் பேரரசர் அசோகர் நினைவை போற்றும் வகையில் அவரது அஞ்சல்தலை வெளியிடும் விழா பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற. விழாவில் அஞ்சல்தலையை வெளியிட்ட மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பேசிய போது நாட்டுக்கு விடுதலைக்கு மிகப்பெரும் சேவையாற்றிய தலைவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் நினைவு அஞ்சல்தலை வெளியிட முடிவு செய்துள்ளோம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உட்பட 25 தலைவர்களின் அஞ்சல்தலையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது இந்த நிலையில்
கவிஞர் வித்யாபதி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் பட்டேல், மவுலானா அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத், சச்சிதானந்த சின்ஹா, ஜெய் பிரகாஷ் நாராயண், கர்ப்பூரி தாக்கூர், கைலாசபதி மிஸ்ரா, மலை மனிதர் தஷ்ரத் மாஞ்சி, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், லோக மான்ய பாலகங்காதர திலகர், மராட்டிய வீர சிவாஜி, இராணி வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள்,
வீரன் அழகுமுத்துக் கோன், பாஜக நிறுவனத் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய, அன்னை தெரசா, ராம் மனோகர் லோகியா, பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மிகப்பெரும் தலைவர் புபேஷ்குப்தாவின் 125-வது பிறந்த நாளையொட்டி அவரது அஞ்சல்தலையும் வெளியிட்டனர் அரசியல் பாகுபாடின்றி ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது வாளுக்கு வேலி அம்பலம் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்பது பகுதி மக்களின் கோரிக்கையாகிறது
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு குடும்பத்தின் நினைவாக நினைவு அஞ்சல்தலைகள் வெளியிடப் பட்டதும் உண்டு
கருத்துகள்