காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டிக் கொலை: பொதுமக்கள் அலறி ஓட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முற்பகலில் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்தவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு, காரில் ஏறி தப்பியதைப் பார்த்த பொதுமக்கள் அலறிபடி சிதறியோடினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு, சொத்துக்காக கூலிப்படை மூலம் தாயே, மகனைக் செய்த கொலையில் கூலிப்படையாகச் செயல்பட்ட மதுரை மாவட்டம் திருமோகூரைச் சேர்ந்த வினீத் (வயது 29) என்பவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து நேற்று முன்தினம் இரவு காரில் நண்பர்களுடன் காரைக்குடி வந்த வினீத், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி
காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்தவரை வெட்டிக் கொலை செய்த நிகழ்வைப் பார்த்த : பொதுமக்கள் அலறியடித்து சிதறியோடினர்
உயிரிழந்த வினீத் இன்று காலை காவல்நிலையத்தில் கையெழுத்திட, விடுதியிலிருந்து இறங்கினய போது காரில் வந்த ஐவர் கொண்ட கும்பல் அவரை வாளோடு விரட்டியது. தப்பியோடியபோது கால் தடுமாறி விழுந்தவரை அந்தக் கும்பல் வெட்டியது. அதைப் பார்த்த வினீத்தின் நண்பர் ஒருவர், வாளை எடுத்துக் கொண்டு அந்த கும்பலை விரட்டினார். ஆனால் அந்தக் கும்பல் அவரையும் வெட்டிவிட்டு, காரில் ஏறியது. மீண்டும் விரட்டிச் சென்ற வினீத்தின் நண்பர், அந்தக் காரை வாளை வைத்துத் தாக்கினார். அதற்குள் அந்த கும்பல் தப்பியது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறிச் சிதறியோடினர்.
அங்கு வந்த காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தினர் காயமடைந்த இருவரையும் அரசிநர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அதற்குள் வினீத் உயிரிழந்தார். தொடர்ந்து காரைக்குடி உதவி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர், அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே வினீத் மீது மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதனால் இந்தக் கொலை பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
கொலைக் குற்றவாளிகள் தாங்கள் வந்த காரில் ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும். அந்தக் காரை காவல்துறை சோதனையிடாமல் இருக்க திமுக கட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர். அதேபோல் வினீத் தரப்பினரும் காரில் ஆயுதங்களுடன் வந்துள்ளனர். ஆனால் கோவிலூர், இரயில்வே சாலை இரயில்வே கேட் அருகே, ஸ்ரீராம்நகர் செல்லும் வழி, கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடிகள் இருந்தும் காவல்துறையினர் இல்லாததால் அந்த இரு கார்களையும் சோதனையிடவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
‹அதேபோல் வினீத் தரப்பினரும் காரில் ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
கருத்துகள்