திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் நகாராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி, சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாறுதல் ஆகி பொறுப்பேற்ற நிலையில் திண்டுக்கல் ஆர்.எம். காலனியிலுள்ள மகேஸ்வரி வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர். இதே போல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த தூய்மைப் பணி ஆய்வாளர்கள் மூவரின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகாராட்சி ஆணையராக இருந்த போது அரசு கொள்முதல் விவகாரத்தில் மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் தற்போது வருமானவரித் துறையின் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுஉள்ளது.
கருத்துகள்