கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரை கைது செய்த இலஞ்ச ஒழிப்புத்துறை
கோவில்பட்டி வட்டாட்சியராகப் பணி செய்யும் வசந்த மல்லிகா மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில்.
கோவில்பட்டி பகுதியில் ராஜா ராம் என்பவர் தனது வீட்டுக்கு தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்து பின் வட்டாட்சியர் வசந்த மல்லிகாவைச் சந்தித்த போது அவர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு முப்பதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் கொடுக்க மனம் இல்லாத ராஜாராம் உடனடியாக ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையினரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையின் துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால் உத்தரவில் ராஜாராம் புதன்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியர் வசந்த மல்லிகாவுக்கு பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய முப்பதாயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டாட்சியர் வசந்த மல்லிகா பணம் பெற்றபோது கையுடன் பிடித்தனர்.
அதனையடுத்து அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை நடைபெற்றது.
ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்பீட்டர் பால் தலைமையில் ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர்கள் தளவாய் ஜம்புநாதன், பாண்டி, சுந்தரவேல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் வசந்த மல்லிகா அவருடைய வாகன ஓட்டுனர் கிருஷ்ணா ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி
விசாரணைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர் படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
வருவாய்த்துறைச் சேர்ந்த வட்டாட்சியர் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பிடிபட்டிருப்பது அரசு ஊழியர்களில் வருவாய்த் துறையினர் மத்தியில் பேசப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து தங்களுடைய பணிகளை செய்வதற்கும் சட்டத்துக்குப் புறம்பான சில பணிகளைச் செய்வதற்கும் அரசு அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.லஞ்ச ஒழிப்பு துறைக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் லஞ்சம் வாங்குவது என்பது அரசு பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது .
கருத்துகள்