பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது
செங்கல்பட்டு நகர பாமக செயலாளர் நாகராஜ் கொலையாளிகளை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும்! எனவும் வலீயுறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே மலர் வணிகம் செய்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார்
பூக்கடை நாகராஜ் அவரது இளம் வயதில் இருந்தே பாமக வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடியவர். கட்சித் தலைமை ஆதரவைப் பெற்ற தொண்டர்.
சில வாரங்களுக்கு முன் மறைமலை நகர் பகுதியில் வன்னியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் வலியுறுத்தியிருந்தார் அதை செய்திருந்தால் கூலிப்படைகளுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அதை செய்ய காவல்துறை தவறியதால் தான் பூக்கடை நாகராஜை படுகொலை செய்யும் துணிவு கூலிப்படைக்கு ஏற்பட்டிருக்கிறது. என வுமஹ அவரது கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்