திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை பக்கமுள்ள வாசன் வேலி பகுதி சிவலிங்கம் (வயது 40)
அவரது மனைவி தனலெட்சுமி (வயது 36). வெங்காய வியாபாரியான சிவலிங்கத்திற்கு அளவுக்கதிகமாக குடிகாரர் என்பதால் போதைப் பழக்கமுள்ளது. வீட்டுக்கு வந்து அவர் மனைவி தனலெட்சுமியிடம் வீனான தகராறு செய்து அடித்துத் துன்புறுத்திய நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல போதையில் வீட்டில் பெரும் ரகளை செய்ய, இருவருக்கும் கைகலப்பு உண்டாகியுள்ளது. ஆத்திரம் தாங்க முடியாமல் தனலெட்சுமி தன்னுடைய உறவினர்களான செந்தில்குமார், ஆறுமுகம், அவருடைய மனைவி சுமதி ஆகிய மூவரையும் வீட்டுக்கு வரவழைத்த நிலையில் மூவரும் சேர்ந்து சிவலிங்கத்தைக் கண்டிக்க, பிரச்சனை தீராமல் பெரிய வாக்குவாதமாக
மாறியதற்கிடையே ஆவேசமடைந்த தனலெட்சுமி, 'நீ உயிரோட இருந்தா எப்பவுமே பிரச்னை தாண்டா. உன்னை கொன்னுட்டா எல்லா பிரச்னையும் சரியாகிடும்' என சொல்லிக்கொண்டே வீட்டிலிருந்த இரும்புக்கம்பியை எடுத்து கணவர் சிவலிங்கத்தின் நெஞ்சில் தாக்கியதில் உயிர் போனதாகவும் இந்தக் கொலைச் சம்பவம் வெளியே தெரியாமல் தனலெட்சுமியும் அவரது உறவினர்கள் மூவரும் சேர்ந்து, சிவலிங்கத்தின் உடலையை யாருக்கும் தெரியாமல் எரித்துவிடத் திட்டம் போட்டதனடிப்படையில் சிவலிங்கத்தின் உடலை ஒரு சாக்கில் மூட்டையாகக் கட்டி, ஆம்னி வேனில் ஏற்றி எரிக்க இடம் தேடியபடி திருச்சிராப்பள்ளியில் சுற்றியுள்ளனர். திருச்சிராப்பள்ளியிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் நவலூர் கொட்டப்பட்டு அருகில் இவர்கள் ஆம்னி வேனை நிறுத்தியிருந்தபோது, ராம்ஜிநகர் காவல் நிலைய காவலர் விஜயகுமார் அங்கு வந்ததைப் பார்த்ததும் ஆம்னி வேனில் இருந்து செந்தில்குமார் என்பவர் இறங்கி ஓடியதும், மற்ற மூவரையும் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணமாகப் பதில் அளித்ததையடுத்து காவலர் விஜயகுமார் அந்த ஆம்னி வேனை எட்டிப்பார்த்துச் சோதனையிட, சாக்குமூட்டைக்குள்லிருந்த சிவலிங்கத்தின் சடலத்தைக் கண்டார். அவரது தகவலையடுத்து ராம்ஜிநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தனலெட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய மூவரையும் கைதுசெய்து, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், சாக்குமூட்டையில் சடலமாகக் கிடந்த சிவலிங்கத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சிராப்பள்ளி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்வதோடு, தப்பியோடிய செந்தில்குமாரைதேடி வருகின்றனர்.
கருத்துகள்