15.07.2023 தேதியிட்ட அறிவிக்கையின் படி, குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்தப் பிறகு,
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி திரு தினேஷ் குமார் சிங்கை, கேரள உயர் நீதிமன்றத்திற்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி திரு மனோஜ் பஜாஜ்-ஐ அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கும், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு கவுரங் காந்த்-ஐ கல்கத்தா
உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார். அந்தந்த உயர் நீதிமன்றங்களில் தங்கள் அலுவலகப் பொறுப்பை ஏற்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள்