முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து விசாரணை தீவிரம்

நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு வழக்கில் தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து   விசாரணை தீவிரம்: ஒரு காவல் அதிகாரியின்  சகோதரர் சிக்குகுவாரா ?.


விருதுநகர் மாவட்டத்தில்  தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் விற்பணை  நிறுவனம் செயல்பட்டது. அது வாடிக்கையாளர்களைத் தூண்டி ஆசைகாட்டி நம்பவைத்து கூடுதல் வட்டி மற்றும் செலுத்திய தொகைக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகவும், பல மாவட்டங்களில் சாமானியர்கள் உள்ளிட்ட பலரிடம் முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களின்  புகார்களின் பேரில், மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றத்தடுப்புக் காவல்துறை ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சி வீரசக்தி (வயது 49) மற்றும் முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்


இவ்வழக்கில் இயக்குநர்களாக செயல்பட்ட தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து, சகாயராஜ் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அலுவலர் பத்ம நாபன், விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மாரிச்சாமி (வயது 50), சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி மலைச்சாமி உள்ளிடட ஒன்பது  பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளநிலையில், சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் ஜாமீன் பெற்றுள்ளனர்.




இந்த நிலையில் நியோ- மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்காப்பட்டோர் புகார் அளிக்கத், தயங்கிய நிலையில், மதுரை, விருதுநகரில் புகார் மேளா நடத்தியும்  புகார்களை வாங்கிப் பதிவு செய்த போதிலும் தொடர்ந்து பணம் வசூலித்த முகவர்களால் புகார் அளிக்கும் நபர்கள் தடுக்கப்படுவதாகவும்  காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கின்ற நிலையில்,




இவ்வழக்கை ஏற்கெனவே மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி தலைமையில் ஆய்வாளர் கமர்நிசா  விசாரித்த நிலையில், தற்போது, தனி துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு்ளதுதன்படி, புதிய துணைக் கண்காணிப்பாளராக மணிஷா  என்பவர் தலைமையின் கீழ் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள்  குழுவாக  வழக்கை விசாரிக்கின்றனர்.


காவல்துறையினர்  தரப்பில் விசாரித்த போது, “இந்த வழக்கின் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவானவர்களை தனிப்படை மூலம் தேடி வருகிறோம். அதில் காவல் அதிகாரி ஒருவரின் சகோதரரும் இந்த நிறுவன முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கில் சிக்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கியதில் பட்டியலில் அந்தக் காவல்  அதிகாரியின் சகோதரரின் பெயருமுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் விதமாக நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த வித தயக்கமுமில்லாமல்  புகாரளித்து ஒத்துழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...