மணல் குவாரிகளில் கொள்ளையடித்த ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் க்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மணல் குவாரிகளில் கொள்ளையடித்த ஒப்பந்ததாரராகக் கருதப்படும் எஸ்.ஆர் எனும் இராமச்சந்திரனுக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாகச் சோதனை !
புதுக்கோட்டையில் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் நேற்று முன்தினம் முதல் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கணிம வளக் கொள்ளை நடந்ததில் கடந்த காலங்களில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பிஆர்பி என்ற பிராதுக்காரன்பட்டி ஆர். பழனிச்சாமியால் நடந்த கொள்ளை அந்த மலை முழுங்கி மஹாதேவன் செய்த செயல் அரசு அதிகாரி சகாயத்ததால் ஒரு முடிவுக்கு வந்தது, அவருக்கு ஜாமீன் வழங்கிய இலஞ்சப் பெருச்சாளி நீதித்துறை நடுவராக இருந்த மகேந்திர பூபதியையும் உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்தது, அது இன்றும் பலரால் பாராட்டப் படுகிறது அதுபோல் தமிழகதில் ஆட்சி செய்யும் யாருக்கும் கப்பம் கட்டிவிட்டு தொடர்ந்து மணல் கொள்ளை அடித்த மாஃபியா எஸ். ஆர் உள்ளிட்ட பலர் தாங்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கால் இவர்கள் தங்களை பெரிய மனிதர்களாகக் காட்டி பல திகிடுதத்தங்களை நிகழ்த்தியவர்கள் அவர்களது குவாரிகளில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையை நடத்தி வருகின்றனர் இவர்கள் தான் நன்றாக நேர்மையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை இலஞ்ச ஊழல் நிறைந்த மாவட்டமாக மாற்றியவர்கள் ஆவர், இதில் சாமானிய மக்கள் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் கொடுத்து மாளவில்லை அந்த அளவு ஊழல் பெருக இவர்களும் காரணம், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், அவரது நண்பர்கள், பினாமிகள், உறவினர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் (செப்டம்பர்.12 ஆம் தேதி ) அதிகாலையில் தொடங்கிய அமலாக்கத்துறையின் சோதனை ஒரு நாள் கடந்தும் விடிய விடிய நடைபெற்று வருகிறது,
தொடர்ந்து நடைபெற்று வருவதால் எங்கே கைதுசெய்யப்பட்டுவிடுவோம் எனப்பயந்து தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து பலகோடிகளை மணல் மூலம் சுருட்டியவர் இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.மேலும் அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அவரது சம்பந்தி பழனி மாணிக்கம் முன்னால் மத்திய அமைச்சர் என்ற தைரியத்தில் பல மோசடி மணல் கொள்ளை நிகழ்த்தி பல கோடிகளை சுருட்டி வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்க வாய்ப்புள்ளதால் தான் இந்த சோதனை எனக் கூறப்படுகிறது, சரி மணல் குவாரிகள் தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அவர் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளையும் பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து வருகிறார். 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து, கடந்து 2016 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக தற்போது புதுக்கோட்டையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் புதுக்கோட்டையிலுள்ள நிஜாம் காலனி, சமுத்திரா அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொணடனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்து இடங்களில் தற்போது சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி சாலையிலுள்ள முத்துப்பட்டினம் கிராமத்திலுள்ள அவரது வீடு, கந்தர்வகோட்டை அருகிலுள்ள கல்குவாரியிலும், இராமச்சந்திரன் உறவினரான சண்முகம் எனபவரது கிராவல் மண் குவாரியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
2018ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறதா அல்லது வேறு ஏதேனும் புது வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறதா என்று சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.ராமச்சந்திரனுடைய நண்பரும், புதிய தொழிலதிபருமான மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மணல் ஒப்பந்தக்காரருமான கரிகாலன் வீடுகளில் தற்பொழுது மூன்று வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.எஸ்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை உள்ளதால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல கந்தர்வகோட்டை அருகிலுள்ள அரியானிப்பட்டியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செம்மண் குவாரிகளிளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்