முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

 பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(வயது16) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்,


12 ஆம் வகுப்பில் படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,

சென்னை, டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணியளவில்  மன அழுத்தம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை 3 மணியளவில் இவர் மின்விசிறியின் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்…விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது, அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், வீட்டிலுள்ள பணியாளர்கள் உதவியுடன் மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள்  பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அது தொடர்பாக ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.




மேலும் உயிரிழந்த மீராவின் உடலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையின் முதற் கட்ட விசாரணையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் மீரா அவரது தோழிகளை சந்திப்பதற்காக வெளியில் சென்றதாகத் தகவல் வெளியானது. பின்னர், இரவு வீட்டிற்கு வந்து உணவு உண்ட பின் படுக்கையரைக்கு சென்றவர் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீரா கடந்த ஒரு வருட காலமாக ஆழ்வார்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான ஆலோசனைகளையும், சிகிச்சையும் எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த மருத்துவரிடமும், நேற்று வெளியே சென்று சந்தித்த தோழிகளிடம் ஏதாவது கூறினாரா ? என்றும் காவல்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்களைச் சேகரித்து இது தற்கொலை தானா என்ன உறுதி செய்வதற்கு ஆய்வுகளைச் செய்தனர்.




மீரா மறைவால் திரையுலகினர்  அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உள்ளிட்டவர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்றும், மேலும் பல பிரபலங்கள் எக்ஸ் தளத்திலும் இரங்கலைத் தெரிவித்தனர், இந்த நிலையில் குழந்ரைகள் பாதுகாப்பு நல அமைப்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு : பரிதாபமாகத் தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியானது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் (TNCRW) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நமது சமூகத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிப் புகாரளிக்கும் பொறுப்பு செய்தி நிறுவனங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் அத்தகைய படத்தை வெளியிடுவதன் நெறிமுறை மற்றும் சட்டரீதியான மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்குத் தெரியும், சம்பந்தப்பட்ட இளம் பெண் (தமிழ் இசை இயக்குனரின் மகள்) மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொண்டார், மனநலம் மற்றும் அதிக விழிப்புணர்வு மற்றும் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தினார்.இருப்பினும், அவள் ஒரு செய்தி மட்டும் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்; அவள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு மனிதப் பிறவி. இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது பச்சாதாபம் இல்லாதது மட்டுமின்றி சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ஐ மீறுவதாகும். சிறார் நீதிச் சட்டம், 2015, தற்கொலை உட்பட எந்தவிதமான துஷ்பிரயோகம் அல்லது குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை வெளிப்படையாகத் தடைசெய்கிறது. என்பதே சில ஊடகங்கள் புரிந்து கொள்ளாத நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம