முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த வீடுகளில் போய் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

இனிமேல் திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த  வீடுகளில் போய் கேமராக்கள் மூலம்  பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை" என அறிவித்திருக்கும் நிலையில்


இத்தனை நாளும் அனுமதியை வாங்கிக்கொண்டா அங்கு கேமாராக்கள்  உள்ளே வந்தது? வீட்டுப்பக்கம் நிக்காமல் அப்டியே ரோட்டுப் பக்கமாகவே நின்று சூட் செய்யப் போறாங்க, அவ்வளவு தான்!

கேமரா இல்லாமல் மொபைலில் படம் புடிக்கறதுல மீடியா-யூடியூபர்களை விட பொதுமக்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது, அதை என்ன செய்ய முடியும்?

ஒழுக்கமும் கருணையும் பிறர்வலியை தன்வலியாய் உணரும் மனிதநேயமும், கூடவே பயணப்பட்டிருந்தால் இது போன்ற 'நோ அட்மிசன்' எனும் நடிகர் சங்கத்தின் கடிதம்  வந்திருக்காது.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் போன்ற திரையுலக ஆளுமைகளின் இறப்பின் போது மட்டும்  இப்படி யாரும் தடுத்துச் சொல்லவில்லை.


காரணம்  பிரபல திரைநட்சத்திரம் செத்துப் போனால், அவர் குடும்பத்தையே மொத்தமாய் நொறுக்கிப் போட்டு விடுவதும் அதிலும் சிறப்பாக ஜூஸ் பிழிந்தது நாங்கள் தான் என்று ஒன்றிரண்டு முந்திரிக்கொட்டை சேனல்கள் பிரேக்கிங் நியூஸ் போடுவதும் ஒரு வகை.

இன்னொரு வகை, பிரபல திரைப்பட நட்சத்திரத்தின் குடும்பத்தில் யாராவது அகால மரணத்தை எதிர்கொண்டால் அந்த திரை நட்சத்திரத்தையே மிக்சியில் ஜூஸ் போட்டு விடுவது!

அப்படியான ஜூஸ் இதுவரை யாருமே குடித்திராத ஜூஸாக இருக்கணும் என்பதற்காக அந்தத் திரை நட்சத்திரம் குறித்த விபரங்களை தொகுத்து ஒட்ட ஒட்டவே பிழியப்படுகிறார்.

இப்படி ஜூஸ் பிழிவதில் திறனற்ற அல்லது அந்த வாய்ப்பை நழுவவிட்ட செய்தியாளர், அவரது அலுவலகத்துக்குள் பிழியப்பட்டு விடுகிறார், சிலர் பிழிந்து எடுத்த பின் வெளியேற்றவும் படுகிறார்.

கண்ணீரை பிறர் அறியாதவாறு விரலால் சுண்டிய முக்கியப் பிரமுகரின் 'அந்தக் காட்சி' யை சுருட்டாத கேமரா மேன்களுக்கும் செய்தியாளருக்கு நேர்ந்த அதே கதிதான் நிகழும்.

'எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள், எங்கள் குழந்தையின் இறுதிப் பயணம் அமைதியாக இருக்க விரும்புகிறோம்" என்று கதறக்கூடவா ஒரு தந்தைக்கு உரிமை இல்லை...அதுவும் அந்த விஜய் ஆண்டனி நிலை மிகவும் மோசம்.

உச்சப்புகழ் இத்தனை உபாதையா கொடுக்கும் என்பதை அப்போதே அவர் உணர்ந்திருப்பார்

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் மாரிமுத்து உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். எதிர்நீச்சல் சீரியல் 'அப்பத்தா' கேரக்டர் நடிகையான பாம்பே ஞானம் மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த போது, 'அப்பத்தா' நடிகையிடம் மைக் நீட்டிய ஊடகங்கள் சற்றும் எதிர்பாராத கேள்வி மூலம் சில  வார்த்தைகளை எதிர்கொண்டனர். 

 "நாலு நாளைக்கு முன்னாலயே மாரிமுத்து திடீர் மரணம்ன்னு, யூடியூப் - சோசியல் மீடியாக்களில் ப்ளாஷ் பண்ணிட்டாங்க. அப்படி கேவலமா நியூசை போட்டுத்தான் நீங்க உயிர் வாழணுமா? அடுத்தவங்க மனசு எவ்வளவு புண்படும்னு எந்தக் கவலையும் இல்லாமப் பண்றீங்களே, இப்படி சம்பாதிக்கிற பணம், உங்களையே கொன்னுடும்" --  

என்று சொல்லி பேட்டியை முடித்தார். பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை.

அதே சினிமாவுலக உறவுகளில் இன்னொரு இறப்பு. அதை விட அதிகமான 'பிராண்டிப் பிடுங்கிய செய்திப் பிராண்டல்.

கெட் -அவுட் எனும்  டில் முடிந்திருக்கிறது. அந்த டீல் நமக்குப் பிடித்திருக்கிறது 

மிகச் சாதாரணமாக வண்ணத்தில்

 'சிறுமி' யின் படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பெயர் வைத்து

 'கார்டு' வேறு போடுகிறார்கள். எந்த பெயர் சரி என்று சரிபார்க்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை. நிதானமும் இல்லை தார்மிக அடிப்படையில் வெளியிடஸமல் இருக்கலாம்.

சிறார் சட்டப்படி இறந்தவருக்கு உடன்பிறந்தோர் இருப்பின், 'பப்ளிஷ்' செய்த  மீடியாக்கள் முகவரி தேடி அந்த ஆணையம் செல்லும்.

ஆம்!  உடன்பிறந்தோர் இருப்பின் இறந்த சிறாரின் பெயர் - முகவரி என ஏதும் வெளியிடக்கூடாது  இதுவும் ஒரு விதி மீறல் தான் ..சிலர் திருந்த இது ஒரு வாய்ப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம