ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ் க்கு ரூபாய்.5 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் சிவலிங்கம். சித்தனவாசல் பூங்காவில் 1988-ஆம் ஆண்டு முதல் இரவுக் காவலராகப் பணிபுரிந்தவர் பணி நிரந்தரம் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் பல ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகாததால் பொன்னையாவுக்கெதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில் செப்டம்பர் மாதம் .22-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில்.
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஆஜரானார்
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜரானார். அப்போது அவர் பல்வேறு நிகழ்வுகள் இருந்ததால் குறிப்பிட்ட நாளில் நேரில் ஆஜராக முடியவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படும். பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். பிடிவாரன்டை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதையேற்று, பிடிவாரன்ட் திரும்ப பெறப்படுகிறது. வழக்கு தொடர்ந்து ஆறாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாததால் பொன்னையா ஐஏஎஸ் க்கு ரூபாய்.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் ரோஜாவனம் முதியோர் இல்லத்துக்கு வழங்க வேண்டும். விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்