பட்டா மாறுதலுக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டு வாங்கிய தாசில்தார் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில் நிலங்கள் வாங்கி பிரித்து விற்பணை செய்யும் வியாபாரியிடம் பட்டா மாறுதலுக்காக ரூபாய். ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய இராஜசிங்கமங்கலம் தாசில்தார் தென்னரசு, வயது 51, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்டும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதி புதூர் மேலத் தெரு கருப்பையா இராஜசிங்க மங்கலம் வட்டம் வில்லடிவாகை குரூப் இரட்டையூரணி கிராமத்தில், 20 ஏக்கராக வாங்கிய நிலத்துக்கு அவரது பெயரில் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி, இராஜசிங்க மங்கலம் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பின் அந்த வட்டாச்சியர் தென்னரசை நேரில் அணுகியுள்ளார். பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் ரூபாய். மூன்று லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூபாய் ஒரு லட்சம் தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கருப்பையா, இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்ததில் அவர்கள் ஆலோசனையின் பேரில், பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அரசு தரப்பு சாட்சிகள் முன்னிலையில் பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த தென்னரசுவிடம் கருப்பையா நேற்று கொடுத்தார்.
அப்போது அருகில் கண்காணித்தபடி மறைந்திருந்த இராமநாதபுரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், ஆய்வாளர் இராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் வட்டாட்சியரை பணம் வாங்கிய உடன் கைதுசெய்து. மேலும், அவரிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின் சோடியம் காரபனேட் கரைசல் மூலம் உறுதி செய்து குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்
பின்னர், இராஜசிங்க மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம், வட்டாச்சியரின் ஜீப், ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாட்சியர் தங்கியிருந்த அறை மற்றும் விருதுநகரிலுள்ளஅவரது வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கருத்துகள்