சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதி புதூரிலுள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் ஜெயராம் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் டிப்ளமோ படித்தவர்களுக்கும் மற்றும் பள்ளியில் படித்து உயர் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு
விழாவை நடத்திய நிலையில் விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை தாங்கினார். ஸ்ரீராஜராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் வடிவாம்பார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மாணவர்களுக்கு பட்டங்களையும் பட்டயங்களையும் வழங்கிப் பேசிய போது :- இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் வளர்ச்சி பெற்றுள்ளது.ஆனால் பிற பின்தங்கிய மாநிலங்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் மத்திய அரசு புகுத்தியுள்ளது. அதில் நீட் தேர்வுக்கு எதிராக தொடக்க நிலையிலிருந்தே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 10 லட்சம் மாணவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி அறிவோடு கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியினையும் மாணவர்கள் பெற வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ராம் கணேஷ் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார்.
இந்த விழாவில் காரைக்குடி நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை, காரைக்குடி கனரா வங்கியின் துணைப் பொது மேலாளர் பாபு, அமராவதி புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்