முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார்.

சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்தியா - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மூலமாக தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். கப்பலின் இந்த 3 மணிநேரப் பயணம் மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கும். இந்த கப்பல் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது. இந்தப் பயணம், கடலில் உள்ள இயற்கை சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் நிலையில் நல்லமுறையில் அமையும். இதன் மூலம் இலங்கை இந்தியா இடையே கலாச்சார உறவு மற்றும் வர்த்தகம் பெருகும் வாய்ப்புள்ளது.


குறைந்த செலவிலான இந்தப் பயணத்தின் மூலம் இருநாட்டு மக்களும் விரைவாக பயணிக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறையும் நன்கு வளர்ச்சியடையும் என்றார். இதன் மூலம் இருநாட்டு மக்களும் நல்ல பயனடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரவிக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு மற்றும் சிறப்புக் கவனம் மற்றும் ஒத்துழைப்பு


ஆகியவற்றால் இந்த கப்பல் போக்குவரத்து சாத்தியமானது என்றார். இதனால் அனைத்து தரப்பு முன்னேற்றங்களும் இருநாடுகளுக்கும் ஏற்படும் என்றார்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு  கப்பல் சேவை தொடங்கியதன் தொடக்க விழா காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசி புதிய அறிவிப்பை  வெளியிட்டார்.  இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில்



சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததையடுத்து இருநாடுகளிடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ்நாட்டின் நாகபட்டினம்  துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதையடுத்து கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கப்பல் தயாரிக்கப்பட்டது. செரியாபாணி எனப்  பெயரிடப்பட்டுள்ளது ஏற்கனவே இயங்கிய கப்பல் ராமானுஜம் இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக பல ஆண்டுகளுக்கு  முன்பே நிறுத்தப்பட்ட நிலையில் இந்தக் கப்பல் நாகபட்டினம்  துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பிறகு 2 நாட்கள் மட்டும்  சோதனை வெள்ளோட்டம் நடந்ததையடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் சேவை தொடங்குவதாக இருந்த நிலையில் இறுதி நேரத்தில் கப்பல் சேவை தொடங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டதையடுத்து தற்போது நாகபட்டினம்  துறைமுகம்-இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவால் , தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் ஏ.வ.வேலு, எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்று பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற விழாவில்






பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா இலங்கையில் அமல்படுத்தும் திட்டங்கள் அந்த மக்களை வளர்ச்சியடைய செய்து வருகிறது. இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் பல திட்டங்களை இந்தியா செய்துள்ளது. காங்கேசன் துறைமுகத்தை இந்தியா அரசு வளப்படுத்தி வருகிறது. இலங்கையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்க இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜாப்னா பண்பாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளோம். பல அவசர உதவி மையங்களை அமைத்து வழங்கப்பட்டுள்ளது. டிக்கோயாவில் பன்னோக்கு மருத்துவமனையை அமைத்து கொடுகக்கிறோம். அனைவரோடு இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக பயணித்தல் என்ற தொலைநோக்கு பார்வையுட்ன செயல்பட்டு வருகிறோம்.

ஜி20 உச்சி மாநாட்டில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை கூறினோம். அதன்படி தற்போது செயல்பட்டு வருகிறோம். ஜி20 உச்சிமாநாட்டின் இந்தியா, மத்தி கிழக்கு நாடுகள், சிரியா வரை பொருளாதார காரிடார் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இது அந்த நாடுகளின் பொருளாதார நிலையை வெகுவாக முன்னேற்றும். இதனால் இருநாடுகள் இணைக்கப்படும்.தற்போதைய இந்த கப்பல் சேவை (நாகை-காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை) தொடங்குவதற்காக இலங்கை அதிபர், மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்ப்படும். இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நன்றி'' என்றார்  இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இன்று தொடங்கப்பட இருந்த பயணிகள் கப்பல் சேவை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது துவங்கியது 

-ADVERTISEMENT-

150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல் தொலைவிலிருக்கும் இலங்கையின் காங்கேசந் துறைமுகத்திற்குச் செல்லும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினம் துறைமுக கால்வாயை தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம்  20 ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இது தொடர்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை முன்பே ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் 

“சிரியா பாணி”.. முதல் பயணம் 12. ஆம் தேதி ஒத்திவைத்த நிலையில் 

 இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து  தொடங்கப்பட்டது  . மேலும், இந்தப் பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டுப் பயணம் என்பதால் மத்திய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி , தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க மத்திய அரசு உத்தேசித்த நிலையில்.


இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என்றார்.  இந்தப் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் சிரியா பாணி கப்பல் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை நாகபட்டினம்  துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 12 ஆம் தேதிக்கு இந்த முதல் கப்பல் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.  இந்தநிலையில், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக .செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள்  (09.10.2023) இடம்பெற்றிருந்தது.  எனினும் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக இலங்கையில்  அறிவிக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 12 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.“செரியாபாணி” என்ற பெயரைக் கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல்  நாகபட்டினம் துறைமுகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டின் கடவுச்சீட்டு மற்றும் விஷா மற்றும் குடிபெயர்வு அனுமதி பெற்றவர்கள் பயணம் செய்ய ஏதுவானது.

- Advertisement -

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம